Irudhivarai |
---|
பாடகர் : ஷிவ்ஸ் நாராயண்
பாடல் ஆசிரியர் : ஷிவ்ஸ் நாராயண்
நேற்று நீ என் கைகளில் மாலையில் என் மார்பினில் இன்று ஏன் உன் நினைவுகள் என்னிடத்தில்
கண்ணிகளில் ஒரு ஏக்கமும் கனவினில் ஒரு துன்பமும் ஏனடி சிறு கோபம் என் மனதில்
போகின்றேன் வெகுதூரம் நெடுஞ்சாலை முடியும் வரை
பல நாட்கள் கடந்தாலும் உன் நினைவுகள் என்னில் மறைவதில்லை
என் இணையே என் காதல் கதையே என்னிடத்தில் இனி நீ இன்றி நான் ஏதடி உயிர் உடல் விட்டு பிரியும் வரை
அடி உன்னை விட்டு நான் போவதெங்கே என் பாதி நீயடி என் வீடென்பதும் நீ இருக்கும் இடம் தானடி அதில் நாம் வாழ்ந்திடுவோம் இறுதிவரை
நாடகம் என் வாழ்வினில் நடத்தினாய் நொடி பொழுதினில் பார்க்கிறேன் அதை தினமும் என் மனதில்
என் மனம் ஒரு தனிமையில் தேடிய உன் நினைவுகளை பார்க்கிறேன் நான் அதற்குள் தொலைகிறேன்
போகின்றேன் வெகுதூரம் நெடுஞ்சாலை முடியும் வரை
பல நாட்கள் கடந்தாலும் உன் நினைவுகள் என்னில் மறைவதில்லை
என் இணையே என் காதல் கதையே என்னிடத்தில் இனி நீ இன்றி நான் ஏதடி உயிர் உடல் விட்டு பிரியும் வரை
அடி உன்னை விட்டு நான் போவதெங்கே என் பாதி நீயடி என் வீடென்பதும் நீ இருக்கும் இடம் தானடி அதில் நாம் வாழ்ந்திடுவோம் இறுதிவரை
இறுதிவரை ஹ்ம் னா னா னானானா
காலம் ஓடலாம் நீ மாறலாம் நானும் மாறலாம் ஆனால் நாம் கொண்ட காலம் மாறுமா எந்தன் வீட்டில் எந்தன் அறையினில் உன் காதலில் என் காவலில் நாம் வாழ்ந்திடுவோம் இறுதிவரை