Irunthal Ezhunthu Vaadi |
---|
பாடலாசிரியர் : கண்ணதாசன்
இருந்தால் எழுந்து வாடி நீ இருந்தால் எழுந்து வாடி அடி திரிசூலி ஓங்காரி மாகாளி பைரவி இருந்தால் எழுந்து வாடி
இருந்தால் எழுந்து வாடி நீ இருந்தால் எழுந்து வாடி அடி திரிசூலி ஓங்காரி மாகாளி பைரவி இருந்தால் எழுந்து வாடி
வரங்கேட்க வரவில்லை இங்கே உன்னை வரவேற்க நிற்கின்றேன் உன் பார்வை எங்கே
இருந்தால் எழுந்து வாடி நீ இருந்தால் எழுந்து வாடி அடி திரிசூலி ஓங்காரி மாகாளி பைரவி இருந்தால் எழுந்து வாடி
அனைத்துக்கும் நீயேதான் பொறுப்பா உன் அதிகாரம் சில பேர்க்குச் சிரிப்பா இனத்தாலும் குலத்தாலும் வெறுப்பா அது எந்நாளும் அணையாத நெருப்பா
இருந்தால் எழுந்து வாடி நீ இருந்தால் எழுந்து வாடி அடி திரிசூலி ஓங்காரி மாகாளி பைரவி இருந்தால் எழுந்து வாடி
கல்லாக இருக்கின்ற தாயே இதைக் காணாமல் குருடானாய் நீயே நல்லோரைக் காவாது போனால் நீ இல்லையென்றே நானும் நினைப்பேன்
இருந்தால் எழுந்து வாடி நீ இருந்தால் எழுந்து வாடி அடி திரிசூலி ஓங்காரி மாகாளி பைரவி இருந்தால் எழுந்து வாடி
சூலி திரிசூலியென உள்ளவரை ஒரு பெண்ணை சுடுகின்ற நெருப்பும் உண்டோ சுடர் விட்டு உயர்வானில் எழுகின்ற தீயை நீ ஜோதியாகக் காண்பதுண்டோ
சடசடன படபடன இடமுரசு போல் வானில் சக்கரம் சுழன்றிடாதோ தகதகன தகதகன ஒளி மின்னல் அவ்வானில் தாய் விழிகள் போல் வாராதோ
மடமடன மடமடன மண்ணிலும் விண்ணிலும் மாறியே பெய்திடாதோ மாகாளி அம்பிகையின் சக்தியால் பூமியில் மாயங்கள் தோன்றிடாதோ
தேவியே மாகாளி அன்னையே திரிசூலி தர்மத்தின் மகாராணி எழுந்து வா எழுந்து வா ஓங்காரி எழுந்து வா எழுந்து வா ஓங்காரி எழுந்து வா எழுந்து வா ஓங்காரி