Kaarkalam Idhu Kaarkalam |
---|
பாடலாசிரியர் : வாலி
கார்க்காலம் இது கார்க்காலம் மழை நீர்மேகம் வரும் ஊர்க்கோலம் வாராதோ குளிர் வாடை தாலாட்ட நீயும் வர பக்கம் நானும் வர அதில் காதல் கவிதை பிறக்க
கார்க்காலம் இது கார்க்காலம் மழை நீர்மேகம் வரும் ஊர்க்கோலம் வாராதோ குளிர் வாடை தாலாட்ட நீயும் வர பக்கம் நானும் வர அதில் காதல் கவிதை பிறக்க
ஆற்றோரம் ஒரு நாணல் காற்றோடு அதன் ஊடல் ஆற்றோரம் ஒரு நாணல் காற்றோடு அதன் ஊடல்
நாணல் போல் இங்கு நானாட புது நாணம்தான் மனம் கொண்டாட நாணல் போல் இங்கு நானாட புது நாணம்தான் மனம் கொண்டாட
செந்தாழம்பூவும் இருக்க தேன் உண்ணாமல் வண்டும் தவிக்க
கார்க்காலம் இது கார்க்காலம் மழை நீர்மேகம் வரும் ஊர்க்கோலம் வாராதோ குளிர் வாடை தாலாட்ட நீயும் வர பக்கம் நானும் வர அதில் காதல் கவிதை பிறக்க
போதாதோ ஒரு பார்வை புரியாதோ அதன் வார்த்தை போதாதோ ஒரு பார்வை புரியாதோ அதன் வார்த்தை
கேட்டேனே நான் ஒரு கேள்வி பதில் போட்டாளே இந்த ஸ்ரீதேவி கேட்டேனே நான் ஒரு கேள்வி பதில் போட்டாளே இந்த ஸ்ரீதேவி
நெஞ்சோடு அச்சமிருக்க நீ வாவென்று என்னை அழைக்க
கார்க்காலம் இது கார்க்காலம் மழை நீர்மேகம் வரும் ஊர்க்கோலம் வாராதோ குளிர் வாடை தாலாட்ட நீயும் வர பக்கம் நானும் வர அதில் காதல் கவிதை பிறக்க அதில் காதல் கவிதை பிறக்க அதில் காதல் கவிதை பிறக்க