Kaathoda Pogum Karai |
---|
காத்தோட போகும் கரை தேடும் ஓடம் யாரோடுதான் சோகம் கூறும் யார் கேட்டுத்தான் என்ன ஆகும் என் தங்க வாழ்க்கை வாடும் பூவாச்சு என் சாமிதான் எங்கே போச்சு
காத்தோட போகும் கரை தேடும் ஓடம்
தேரோட வந்த திருநாள் நின்னு போச்சு ஊர் பாத்து சிரிக்கும் நெலம இங்கு ஆச்சு பொண்ணோட ஆச மண்ணோடு போச்சு என்னோட ஆச வீணாகி போச்சு பூவே உன்ன நான்தான் மனம் மாறிட விடுவேனா
காத்தோட போகும் கரை தேடும் ஓடம் யாரோடுதான் சோகம் கூறும் யார் கேட்டுத்தான் என்ன ஆகும் என் தங்க வாழ்க்கை வாடும் பூவாச்சு என் சாமிதான் எங்கே போச்சு
பள்ளத்த தேடி தண்ணி இங்கு ஓடும் பாசத்த தேடி கண்ணீர் வந்து கூடும் காலத்த மாத்தி கரை சேர்ப்பேன் மானே கண் போல உன்ன காப்பேனே நானே தேரில் உன்ன ஏத்தி மணக்கோலம் பார்த்து சிரிப்பேன்
காத்தோட போகும் கரை தேடும் ஓடம் யாரோடுதான் சோகம் கூறும் யார் கேட்டுத்தான் என்ன ஆகும் என் தங்க வாழ்க்கை வாடும் பூவாச்சு என் சாமிதான் எங்கே போச்சு காத்தோட போகும் கரை தேடும் ஓடம்ம்ம்ம்ம்