Kaatriley Nadanthene |
|---|
நிச ரீக ரீக ரீக ரீக ரீக நிச
சம கம மப கரி சநிநி நிச
ரீக ரீக ரீக ரீக ரீக ரிச நிச
தச தசசநி ரிக மதமதமம
மபமபதபப
காற்றிலே நடந்தேனே
காதலை அளந்தேனே
நீ தொட பறந்தேனே
நான் என்னை வியந்தேனே
அய்யோ அய்யோ மேகம் போலே
கலைந்து கலைந்து போகிறேன்
மெய்யோ பொய்யோ தோணவில்லை
ரசிகன் கவிஞன் ஆகினேன்
விண்மீன் முதுகில் ஏறினேன்
நூறு கண்டம் தாவினேன்
உன்னில் உன்னில் மூழ்கினேன்
காற்றிலே நடந்தேனே
காதலை அளந்தேனே
உயிரே உயிரே ரெண்டானதேஓ
இளமை உடைந்து திண்டாடுதேஓ
பாறை கரைந்து பாலானதே
பார்வை நான்கும் கொண்டாடுதே
வானம் எந்தன் தலை தட்டுதே
வார்த்தை என்னுள் கவி கட்டுதே
நீயும்நானும்கேட்காமல்
நாம் ஆனதே
மூச்சு காற்றிலே நுழைந்தாயே
பூச்சு பூட்டுகள் திறந்தாயே
நீ யாரடா தேடினேன் முகவரிதானே
வாய் கூசுதே உன் பேரைதான் பேசுதே
சாரலில் நான் காய்கிறேன்
உன் விழி குடைதானா
ஊமையாய் நான் தேய்கிறேன்
உன் மொழி விடைதானா
ரசித்து கவியை நாடினேன்
உன்னில் உன்னில் மூழ்கினேன்
மின்னல் முதுகில் ஏறியே
நானும் கண்டம் தாவினேன்
காற்றிலே நடந்தேனே
காதலை அளந்தேனே
நீ தொட பறந்தேனே
நான் என்னை வியந்தேனே
நிச ரீக ரீக ரீக ரீக ரீக நிச
சம கம மப கரி சநிநி நிச
ரீக ரீக ரீக ரீக ரீக ரிச நிச
தச தசசநி ரிக மதமதமம
மபமபதபப
