Kaaval Thuraiyin Nayagane |
---|
காவல் துறையின் நாயகனே காதல் துறைக்கு வாருங்கள் காவல் துறையின் நாயகனே காதல் துறைக்கு வாருங்கள்
காக்கிச் சட்டையை கழற்றி போட்டு காதல் சட்டையை மாட்டுங்கள் காக்கிச் சட்டையை கழற்றி போட்டு காதல் சட்டையை மாட்டுங்கள்
காதல் துறையின் நாயகியே காவல் சிறைக்கு வாராயோ
ஆசை என்றொரு விலங்கை போட கூண்டுக் கைதியும் ஆனாயோ ஆசை என்றொரு விலங்கை போட கூண்டுக் கைதியும் ஆனாயோ
காதல் துறையின் நாயகியே காவல் சிறைக்கு வாராயோ
மக்கள் இருக்கும் இடத்தில் நெருக்கம் தப்புத்தான் கூடாதே சட்டம் உனக்கும் எனக்கும் எதற்கு தப்பித்தான் ஓடாதே
வைகாசி மாதம் இளவேனிற்காலம் வசந்த விழாவோ சொல் சொல் சொல் வேறென்ன வேலை விளையாடும் மாலை ஒதுங்கி நிற்காதே வா வா வா
காவல் துறையின் நாயகனே காதல் துறைக்கு வாருங்கள்
தொட்டும் தொடர்ந்தும் படர்ந்தும் மிதக்கும் தென்றல் போல் நான் கொஞ்ச மிச்சம் இருக்கும் வரைக்கும் எடுக்கும் எண்ணத்தில் நான் கெஞ்ச
நீர் கொண்ட மேகம் நிலம் வந்து சேரும் உணர்ச்சி உண்டாச்சு வா வா வா சிங்கார தேகம் சிலிர்கின்ற வண்ணம் அடுத்து என்னாச்சு சொல் சொல்
காதல் துறையின் நாயகியே காவல் சிறைக்கு வாராயோ
கிண்ணம் நிறைந்தும் வழிந்தும் ததும்பும் கன்னித் தேன் நீயாட எண்ணம் இசைக்கும் இனிக்கும் சுரங்கள் சொல்லித்தான் நான் பாட
ஆதாமின் காதல் ஏவாளின் மீது அறிந்துக் கொண்டாயோ வா வா வா பூலோகம் மீது எனக்காக நீயும் பிறந்து வந்தாயோ வா வா வா
காவல் துறையின் நாயகனே காதல் துறைக்கு வாருங்கள் காதல் துறையின் நாயகியே காவல் சிறைக்கு வாராயோ