Kaayaa Pazhamaa Sollu Raja |
---|
என் வேல் விழியைக் கண்டு மான் விழியை படைத்தான் பிரம்மா என் தேன் இதழைக் கண்டு ரதியின் சிலையை செதுக்கினான் விஸ்வகர்மா என் சிவந்த மேனியைக் கண்டு தேவியின் ஓவியமே தீட்டினான் ரவிவர்மா
காயா பழமா சொல்லு ராஜா நீ காயா பழமா சொல்லு ராஜா மெய்க் காதலும் மிஞ்சுதே கண்களும் கெஞ்சுதே
காயா பழமா சொல்லு ராஜா காயா பழமா சொல்லு ராஜா
மாயா வலையென மயங்காதே மாயா வலையென மயங்காதே தேன் மதுவே தருவேன் தயங்காதே ஓயா கவலையில் மூழ்காதே ஓயா கவலையில் மூழ்காதே ஒன்றே போதும் மனம் தளராதே இது ஒன்றே போதும் மனம் தளராதே
காயா பழமா சொல்லு ராஜா நீ காயா பழமா சொல்லு ராஜா மெய்க் காதலும் மிஞ்சுதே கண்களும் கெஞ்சுதே
காயா பழமா சொல்லு ராஜா காயா பழமா சொல்லு ராஜா
தேவரின் அடியார்கள் நாங்களன்றோ தேவரின் அடியார்கள் நாங்களன்றோ எம்மை தரிசிக்கும் பக்தர்கள் நீங்களன்றோ யாவுமே உலகத்தில் வேஷமன்றோ சொந்தம் யாவுமே உலகத்தில் வேஷமன்றோ எழில் மேவும் கிளி நானே இன்பமே தாராய் எழில் மேவும் கிளி நானே இன்பமே தாராய்
காயா பழமா சொல்லு ராஜா காயா பழமா சொல்லு ராஜா மெய்க் காதலும் மிஞ்சுதே கண்களும் கெஞ்சுதே
காயா பழமா சொல்லு ராஜா காயா பழமா சொல்லு ராஜா