Kaayile Inippathenna Kaniyanal |
---|
பாடகர்கள் : ஏ எம் ராஜா மற்றும் ஜிக்கி
பாடல் ஆசிரியர் : ஏ மருதகாசி
காயிலே இனிப்பதென்ன கனியானால் கசப்பதென்ன காயிலே இனிப்பதென்ன கனியானால் கசப்பதென்ன வாயாடி வம்பு பேசும் மானே பதில் சொல்லு வாயாடி வம்பு பேசும் மானே பதில் சொல்லு
காலத்தின் கோலத்தினால் கட்டழகு குலைவதனால் எட்டிக் கனியாக ஆண்கள் என்னும் பெண்ணினந்தான் காலத்தின் கோலத்தினால் கட்டழகு குலைவதனால் எட்டிக் கனியாக ஆண்கள் என்னும் பெண்ணினந்தான்
நீலமாய்த் தெரிவதென்ன நீர்வீழ்ச்சி ஆவதென்ன நீலமாய்த் தெரிவதென்ன நீர்வீழ்ச்சி ஆவதென்ன நிமிர்ந்தே என்னைப் பார்த்து நேரான பதில் சொல்லு நிமிர்ந்தே என்னைப் பார்த்து நேரான பதில் சொல்லு
நெஞ்சிலே அனுதினமும் கொஞ்சும் இன்பதுன்பமெனும் நிலையைக் காட்டுகின்ற பெண்களின் கண்கள்தான் நெஞ்சிலே அனுதினமும் கொஞ்சும் இன்பதுன்பமெனும் நிலையைக் காட்டுகின்ற பெண்களின் கண்கள்தான்
பிரிந்தால் கனலாகி நெருங்கி நின்றால் பனியாகி பிரிந்தால் கனலாகி நெருங்கி நின்றால் பனியாகி கருத்தில் விளையாடக் காணும் பொருளென்ன கருத்தில் விளையாடக் காணும் பொருளென்ன
இரண்டு இதயங்களை இவ்வுலகில் ஒன்றாக்கி என்றும் அழியாமல் வாழும் உண்மைக் காதல்தான் இரண்டு இதயங்களை இவ்வுலகில் ஒன்றாக்கி என்றும் அழியாமல் வாழும் உண்மைக் காதல்தான்
இருவர் : தெய்வீகக் காதலினால் சேர்ந்துவிட்டோம் ஆதலினால் தெய்வீகக் காதலினால் சேர்ந்துவிட்டோம் ஆதலினால் சிங்கார கானம் பாடி வாழ்வோம் நாம் இனிமேல்! சிங்கார கானம் பாடி வாழ்வோம் நாம் இனிமேல்!