Kadalil Alaikal Pongum |
---|
பாடலாசிரியர் : ஏ மருதகாசி
ம்ம்ம்ம்ம்ம் கடலில் அலைகள் பொங்கும் ஆனால் கரையை தாண்டுமோ வெறும் கரையை தீண்டுமோ
கடலில் அலைகள் பொங்கும் ஆனால் கரையை தாண்டுமோ வெறும் கரையை தீண்டுமோ
என் உடலில் உணர்வு பொங்கும் உந்தன் உருவை தாண்டுமோ வேறு உறவை தீண்டுமோ
சின்ன சின்ன காரணத்தால் கன்னமதில் நீர்த்துளிகள் சின்ன சின்ன காரணத்தால் கன்னமதில் நீர்த்துளிகள்
என்னை மட்டும் புரிந்து கொண்டால் அத்தனையும் தேன்துளிகள் என்னை மட்டும் புரிந்து கொண்டால் அத்தனையும் தேன்துளிகள்
தேன் துளியை சேர்த்து வைக்கும் தாமரையில் இதயமம்மா தேன் துளியை சேர்த்து வைக்கும் தாமரையில் இதயமம்மா தாமரையை மலர வைக்கும் ஆதவனின் உதயமம்மா
கடலில் அலைகள் பொங்கும் ஆனால் கரையை தாண்டுமோ வெறும் கரையை தீண்டுமோ
கண்கள் சொன்ன கவிதை எல்லாம் கல்லெழுத்து போன்றதம்மா கண்கள் சொன்ன கவிதை எல்லாம் கல்லெழுத்து போன்றதம்மா
கல்லெழுத்து என்றிருந்தால் காலம் என்ன செய்யுமம்மா கல்லெழுத்து என்றிருந்தால் காலம் என்ன செய்யுமம்மா
நீரடித்து நீர் விலகி பார்த்ததில்லை பூமியிலே நீரடித்து நீர் விலகி பார்த்ததில்லை பூமியிலே நீ பிரிந்து நான் இருந்தால் வாழ்க்கையில்லை பொன்மகளே
கடலில் அலைகள் பொங்கும் ஆனால் கரையை தாண்டுமோ வெறும் கரையை தீண்டுமோ
என் உடலில் உணர்வு பொங்கும் உந்தன் உருவை தாண்டுமோ வேறு உறவை தீண்டுமோ