Kalavani

Kalavani Song Lyrics In English


களவாணி
உன்ன எண்ணி அனல்
ஆச்சே பச்ச தண்ணி வித
தானே மரமாச்சு ஐயோ
அய்யய்யோ

மருதாணி
வச்ச கன்னி மனசோட
என்ன பின்னி முடிபோட
சுகம் ஆச்சே ஐயோ
அய்யய்யோ

மந்தையில
ஆடாக முன்ன இருந்தேன்
நான் மந்திரிச்ச ஆடாக இப்ப
கவுந்தேன்

இது மந்திரமா
தந்திரமா சுந்தரியே
சொல்லு சொல்லு

களவாணி
உன்ன எண்ணி அனல்
ஆச்சே பச்ச தண்ணி வித
தானே மரமாச்சு ஐயோ
அய்யய்யோ

மருதாணி
வச்ச கன்னி மனசோட
என்ன பின்னி முடிபோட
சுகம் ஆச்சே ஐயோ
அய்யய்யோ

புள்ளி வச்ச
கோலம் வரும் என்று
இருந்தேனே கோலம்
நீயும் புள்ளி வச்சு தள்ளி
போறாயே

ஆடி வந்தா
காத்து வரும் என்று
அறிவேனே காத்தா
நீயும் ஆடி போக கண்ணு
வச்சாயே

முன்னால நீ
வந்தாலே குத்து விளக்கு
கீழ் வந்துடுதே தன்னாலே
மீசை முறுக்கு

உன்ன கண்டதுமே
சக்கரமா சுத்திடுதே நெஞ்சு
நெஞ்சு


களவாணி
உன்ன எண்ணி அனல்
ஆச்சே பச்ச தண்ணி வித
தானே மரமாச்சு ஐயோ
அய்யய்யோ

கூறு கத்தி
ஊது பத்தி போல
உருமாறி போனதென்ன
நீயும் என்ன கண்டா
பின்னாலே

பூமி பந்து கூட
பந்து போல திசை மாரி
போவதென்ன இப்ப நீயும்
சொன்ன சொல்லாலே

பக்கத்துல நீயும்
வந்தா பத்தும் நெருப்பு
ஏ பத்த மட பாய் வாங்க
சொல்லி அனுப்பு

காண கச்சிதமா
கொல்லுறியே வெல்லுறியே
என்ன என்ன

களவாணி
உன்ன எண்ணி அனல்
ஆச்சே பச்ச தண்ணி வித
தானே மரமாச்சு ஐயோ
அய்யய்யோ

மருதாணி
வச்ச கன்னி மனசோட
என்ன பின்னி முடிபோட
சுகம் ஆச்சே ஐயோ
அய்யய்யோ

மந்தையில
ஆடாக முன்ன இருந்தேன்
நான் மந்திரிச்ச ஆடாக இப்ப
கவுந்தேன்

இது மந்திரமா
தந்திரமா சுந்தரியே
சொல்லு சொல்லு