Kalidasanin Kavithai

Kalidasanin Kavithai Song Lyrics In English


பாடலாசிரியர்  : புலமைபித்தன்

ஓஹ்ஹ்ஹ ஹோ ஹோ ஓஒ ஓஹ்ஹ்ஹ ஹோ ஹோ ஓஒ ஓஹ்ஹ்ஹ ஹோ ஹோ ஓஒ

காளிதாசனின் கவிதை நாடகம் கலைந்து போனதென்ன காதல் தேவதை கனவு மாளிகை இடிந்து போனதென்ன

சகுந்தலை சரித்திரம் எதுவரை தொடர்ந்திடும் காதல் வானிலே வந்த பௌர்ணமி செய்த பாவமென்ன விழியில் மழையா மனதில் புயலா

காலம் முழுக்கவும் ஆடிப் பொழைப்பது விதியா சொல் மாமா ஆசை கனவே பொய்தானா அடி ஆசை எங்கு தீரும் தெனம் ஆடிப் பிழைக்க வேண்டும் ஓஹோ ஆசை எங்கு தீரும் தெனம் ஆடிப் பிழைக்க வேண்டும் ஹோ ஹோய்ஹோ ஹோய்ஹோ ஹோய் ஹோய்ய்ய்ய்யா

இரு பக்கம் தூண்டில் விதி வந்து போடும் துடிக்கின்ற மீனாய் ஒரு நெஞ்சம் வாடும் கடமையை பார்த்தால் காதலும் இல்லை காதலைப் பார்த்தால் கடமையும் இல்லை

போராடும் உள்ளம் யாரோடு செல்லும் என்னென்ன தீர்ப்போ காலங்கள் சொல்லும் காதல் வானிலே வந்த பௌர்ணமி செய்த பாவமென்ன எதுதான் வழியோ இதுதான் விதியோ

ஊரு நடுங்கிடும் நேரம் நெருங்கையில் பானையும் ரெண்டாச்சு ஓட்டை பானை ஒடைஞ்சாச்சு நடு சாம நேரமாச்சு அதனால் தாளம் மாறிப்போச்சு ஓஹோ சாம நேரமாச்சு அதனால் தாளம் மாறிப்போச்சு ஹோ ஹோய்ஹோ ஹோய்ஹோ ஹோய் ஹோய்ய்ய்ய்யா

புயல் கொண்டு போக பூச்சரம் வைத்தேன் ஆயிரம் காலம் நானிங்கு பார்த்தேன் விடுகதை போலே ஆனது வாழ்க்கை பொருளறியாமல் எழுதிய வார்த்தை

வேதனை என்னும் சிறையினில் வாழ்ந்தேன் விதியிடம் இன்று விடுதலை கேட்டேன் காதல் வானிலே வந்த பௌர்ணமி செய்த பாவமென்ன இரவில் பொழியும் பனியும் எரியும்


அடிக்கிற காத்தில அரும்புகள் சாய்ந்திட ஆண்டவன் படைத்தானா இந்த அவசரம் சரிதானா அது காலம் போற வேகம் இதில் யாரை நொந்து லாபம் ஓஹோ காலம் போற வேகம் இதில் யாரை நொந்து லாபம் ஹோ ஹோய்ஹோ ஹோய்ஹோ ஹோய் ஹோய்ய்ய்ய்யா

வானிலுள்ள மீனுக்கென்று தூண்டிலிட்டான் தூண்டில் தன்னில் தானே மாட்டிக்கொண்டான் அத்திப்பூக்கள் பூக்குமென்று காத்திருந்தான் ஆசைக் கொண்டு நாளும் காத்திருந்தான்

பூவும் இல்லை வாசம் இல்லை ஆசை தீரும் நாளும் இல்லை காதல் என்னும் பாதை எங்கு போகிறதோ கால்கள் ரெண்டும் எங்கு சென்று சேர்ந்திடுமோ காதல் வானிலே வந்த பௌர்ணமி செய்த பாவமென்ன எதுவும் நிஜமோ கனவும் சுகமோ

நெனச்சது நடக்கல வெதச்சது மொளைக்கல மயக்க நெஞ்சுக்குள்ளே இதுக்கு மருந்து என்ன புள்ள இதுக்கு மருந்து ஏதுமில்ல உன்னோட மனந்தான் சரியில்ல அடியே மருந்து ஏதுமில்ல உன்னோட மனந்தான் சரியில்ல ஹோ ஹோய்ஹோ ஹோய்ஹோ ஹோய் ஹோய்ய்ய்ய்யா

நான்கு நெஞ்சிலும் கண்கள் யாவிலும் வந்த சோகமென்ன என்று ஏங்கிடும் அன்பு நெஞ்சமே கொண்ட பாசம் என்ன தீபம் ஏற்றவும் பாதை காட்டவும் துடிக்கும் உள்ளமென்னஏஏ

நாளை என்பதே நன்மையாகவே ஆக வேண்டும் இங்கே விடியும் பொழுதே முடிவும் உனதே

நாளொரு மேடையில் ஆடிடும் வாழ்க்கையில் முடிவு என்ன மாமா கொஞ்சம் புரிய சொல்லலாமா அடி நாளைக்கெந்த ஊரோ இந்த வாழ்வுக்கென்ன பேரோ

நாளைக்கெந்த ஊரோ இந்த வாழ்வுக்கென்ன பேரோ நாளைக்கெந்த ஊரோ இந்த வாழ்வுக்கென்ன பேரோ நாளைக்கெந்த ஊரோ இந்த வாழ்வுக்கென்ன பேரோ நாளைக்கெந்த ஊரோ இந்த வாழ்வுக்கென்ன பேரோ