Kamal Kavidhai

Kamal Kavidhai Song Lyrics In English


கண்ணோடு கண்ணை
கலந்தால் என்றால்
கலங்கம் உள்ளவள்
எச்சரிக்கை

உடனே கையுடன்
கை கோர்த்தாளா
ஒழுக்கம் கெட்டவள்
எச்சரிக்கை

ஆடை களைகையில்
கூடுதல் பேசினால்
அனுபவம் மிக்கவள்
எச்சரிக்கை

கலவி முடிந்தபின்
கிடந்து பேசினால்
காதலாய் மாறலாம்
எச்சரிக்கை

கவிதை இலக்கியம்
பேசினாலாயின் காசை
மதியால் எச்சரிக்கை

உன்னுடன் இருப்பது
சுகம் என்றாளா
உறுதியாய் சிக்கல்
எச்சரிக்கை

அறுவடை கொள்
முதல் என்றே காமம்
அமைவது பொதுவே
நலமாக கொள்

கூட்டல் ஒன்றே
குறி என்றானபின்
கழிவது காமம்
மட்டும் எனக்கொள்

உன்னை மங்கையர்
என்னென கொள்வர்
யோசிக்காமல்
வருவதை எதிர்கொள்

முன்னும் பின்னும்
ஆட்டும் சகடை ஆணும்
பெண்ணும் அதுவே
எனக்கொள்

காமம் எனப்படும்
பண்டை செயலில்
காதல் கலவாது
காத்துகொள்

இப்பெண்ணுறைக்கு
எதிராய் ஆணுரை ஒன்றை
இயற்ற துணியும் அணி
சேர்த்துகொள்

ஆஹா இயற்ற
துணியும் அணி
சேர்த்துக்கணுமா
துணிவே அணியும்
துணி என்றானபின்
அணி ஒன்று எதற்கு
தனியே வருவேன்

அப்படி வாங்க
வழிக்கு ஓ நீங்க
கவிஞர் தானே

கில்டி
அஸ் அக்கியூஸ்ட்
அப்போ
ஜட்ஜ்மெண்ட்
சொல்றேன்
சொல்லுங்க
பதிலுக்கு நீங்க
ஒரு கவிதை சொல்லணும்
அதான் தண்டனை

யாருக்கு
அது கவிதைய
கேட்டா தானே
தெரியும்
ஆஹான்
ஹா ஹா ஹா சரி
சொல்றேன் ஆனா
நீங்க கோவிச்சுக்க
கூடாது
ஏன் பெண்களை
பத்தி கேலியா
ச ச அதெல்லாம்
இல்லைங்க இது ஒரு
பெண்ணுடைய
வேண்டுகோள் மாதிரி
ஒரு பெண் தன்
தெய்வத்துகிட்ட
பாடுற தோத்திர பாடல்

ஓ நீங்க
பக்திமானா
அதெல்லாம்
இல்லேங்க நான்
புத்திமானானே
கேள்விகுறியா இருக்கு
கவிதைய கேட்டா
கேள்விகுறி ஆச்சர்ய
குறியா மாறலாம்
இல்லையா
ஹ்ம்ம்
மே பி மே ஐ
ப்ளீஸ்


கலவி செய்கையில்
காதில் பேசி கனிவாய்
மெலிதாய் கழுத்தை
கவ்வும் வெள்ளை
பளிச்சிடும் பற்கள்
வேண்டும்

குழந்தை வாயை
நுகர்ந்தது போல கடும்
நாற்றம் இல்லாத
வாயும் வேண்டும்

காம கனவுகள்
கலையும் வேளையில்
கூட நின்றவன் உதவிட
வேண்டும்
வேண்டும்
சமையலின் போதும்
உதவிட வேண்டும்
வேண்டும்
சாய்ந்து நெகிழ்ந்திட
தின் தோள் வேண்டும்
வேண்டும்

மோதி கோபம்
தீர்க்க வசதியாய்
பாறை பதத்தில்
நெஞ்சும் வேண்டும்
வேண்டும்

அதற்கு பின்னால்
துடிக்கும் இதயமும் அது
ரத்தம் பாய்ச்சி நெகுழ்த்திய
சிந்தையும் மூளை மடிப்புகள்
அதிகம் உள்ள மேதவிலாச
மண்டையும் வேண்டும்
வேண்டும் வேண்டும்
வேண்டும் வேண்டும்

வங்கியின்
இருப்பு வீட்டில்
கருப்பென வழங்கி
புழங்கிட பணமும்
வேண்டும்
வேண்டும் வேண்டும்
வேண்டும் வேண்டும்

நேர்மை வேண்டும்
பக்தியும் வேண்டும்
எனக்கென சுதந்திரம்
கேட்கும் வேளையில்
பகுத்தறிகின்ற புத்தியும்
வேண்டும்
வேண்டும்

இப்படி கணவன்
வர வேண்டும் என நான்
ஒன்பது நாட்கள் நோன்பு
இருந்தேன் வரம் தருவாள்
என் வரலட்சுமி என கடும்
நோன்பு முடிந்ததும் தேடி
போனேன்

தேடி எங்க
போனா அந்த
பொண்ணு
பீச்சுக்கு தான்

பொடி நடை
போட்டே இடை
மெலியும் என
கடற்கரை தோறும்
காலையும் மாலையும்
தொந்தி கணபதிகள்
திரிவது கண்டேன்
முற்றும் துறந்து
மங்கையரோடு
அம்மண துறவிகள்
கூடிட கண்டேன்

எங்க
டிவி லையோ
இஷ்

மூத்த அக்காள்
கணவனுக்கு முக்கால்
தகுதிகள் இருந்தும் கூட
அக்காள் இல்லா வேளையிலே
அவன் சக்காளத்தி வேண்டும்
என்றான்

எக்குலம் ஆனால்
என்ன என்று வேற்று மதம்
வரை தேடி பார்த்தேன் வர
வர புருச லட்சணம் உள்ளவர்
திருமண சந்தையில் மிக
மிக குறைவு

வரம் தர கேட்ட
வரலட்சுமி உனக்கு
வீட்டுக்காரர் அமைந்தது
எப்படி நீ கேட்ட வரங்கள்
எதுவரை பலித்தது
உறங்கிகொண்டே இருக்கும்
உந்தன் அரங்கநாதன் ஆள்
எப்படி

பிரபந்தம் சொல்லும்
அத்தனை சேட்டையும்
வாஸ்த்தவமாக நடப்பது
உண்டோ இதுவும் அதுவும்
உதுவும் செய்யும் இனிய
கணவர் யார்க்கும் உண்டோ

உனக்கேனும் அது
அமைய பெற்றால்
உண்மையிலேயே
அதிர்ஷ்டசாலிதான்
நீ அதுபோல் எனக்கும்
அமையச் செய்யேன்
ஸ்ரீ வரலக்ஷ்மி
நமோஸ்துதே