Kangal Irandal

Kangal Irandal Song Lyrics In English


கண்கள் இரண்டால்
உன் கண்கள் இரண்டால்
என்னை கட்டி இழுத்தாய்
இழுத்தாய் போதாதென
சின்ன சிரிப்பில் ஒரு கள்ளச்
சிரிப்பில் என்னை தள்ளி விட்டு
தள்ளி விட்டு மூடி மறைத்தாய்

பேச எண்ணி
சில நாள் அருகில் வருவேன்
பின்பு பார்வை போதும் என
நான் நினைத்தே நகர்வேனே
மாற்றி கண்கள் எழுதும் இரு
கண்கள் எழுதும் ஒரு வண்ணக்
கவிதை காதல் தானா ஒரு வார்த்தை
இல்லையே இதில் ஓசை இல்லையே
இதை இருளிலும் படித்திட முடிகிறதே

இரவும் அல்லாத
பகலும் அல்லாத பொழுதுகள்
உன்னோடு கழியுமா தொடவும்
கூடாத படவும் கூடாத இடைவெளி
அப்போது குறையுமா

மடியினில்
சாய்ந்திட துடிக்குதே
மறுபுறம் நாணமும்
தடுக்குதே இது வரை
யாரிடமும் சொல்லாதகதை

கண்கள் இரண்டால்
உன் கண்கள் இரண்டால்
என்னை கட்டி இழுத்தாய்
இழுத்தாய் போதாதென
சின்ன சிரிப்பில் ஒரு கள்ளச்
சிரிப்பில் என்னை தள்ளி விட்டு
தள்ளி விட்டு மூடி மறைத்தாய்

கறைகள் அண்டாத
காற்றும் தீண்டாத மனதிற்க்குள்
எப்போது நுழைந்திட்டாய் உடலும்
அல்லாத உருவம் கொள்ளாத
கடவுளைப் போல் வந்து கலந்திட்டாய்


உன்னை இன்றி
வோ் ஒரு நினைவில்லை
இனி இந்த ஊன் உயிர்
எனதில்லை தடையில்லை
சாவிலுமே உன்னோடு வர

கண்கள் எழுதும் இரு
கண்கள் எழுதும் ஒரு வண்ணக்
கவிதை காதல் தானா ஒரு வார்த்தை
இல்லையே இதில் ஓசை இல்லையே
இதை இருளிலும் படித்திட முடிகிறதே

பேச எண்ணி
சில நாள் அருகில் வருவேன்
பின்பு பார்வை போதும் என
நான் நினைத்தே நகர்வேனே
மாற்றி

கண்கள் இரண்டால்
உன் கண்கள் இரண்டால்
என்னை கட்டி இழுத்தாய்
இழுத்தாய் போதாதென

சின்ன சிரிப்பில்
ஒரு கள்ளச் சிரிப்பில்
என்னை தள்ளி விட்டு
தள்ளி விட்டு மூடி மறைத்தாய்