Kannai Padithaen |
|---|
கண்ணைப் படித்தேன்
விண்ணைப் படித்தேன்
உன்னைப் படிக்க இன்னும் முடியலையே
இன்னும் முடியலையே
கண்ணைப் படித்தேன்
விண்ணைப் படித்தேன்
உன்னைப் படிக்க இன்னும் முடியலையே
இன்னும் முடியலையே
சுற்றித் திரிந்தேன்
தித்தித்திருந்தேன்
சுற்றித் திரிந்தேன்
தித்தித்திருந்தேன்
எந்தன் இதயக் கதவை
ஏன் வந்து திறந்தாய்
கண்ணைப் படித்தேன்
விண்ணைப் படித்தேன்
உன்னைப் படிக்க இன்னும் முடியலியே
இன்னும் முடியலையே
கண்ணைத் திறந்தாலும் மறந்தாலும்
தெரியிது உந்தன் உருவம் உயிர் உருவம்
இதயம் அதை வரையும்
கொஞ்சிச் சிரித்தாலும் தவித்தாலும்
இனிக்குது இந்தப் பருவம் இந்தப் பருவம்
அலை அலையாய் ஆசைகளை
அடுக்கடுக்காய் அனுப்புகிறாய்
கொஞ்சம் ரசித்து கொஞ்சம் ருசித்து
கொஞ்சி அணைத்தேன் காற்றில் மிதக்க
கண்ணைப் படித்தேன்
விண்ணைப் படித்தேன்
உன்னைப் படிக்க இன்னும் முடியலையே
இன்னும் முடியலையே
வட்ட வளையோடு கொலுசோடு
உன்னை இசைத்திட வரவா வண்ண நிலவே
தரவா தந்து பெறவா
சின்ன மழையாக வெயிலாக
தொட்டுத் தொட்டு
முத்தம் தரவா தாளம் இடவா
விழி அசைந்தால் உயிர் அசையும்
புது இசையை மீட்டுகிறாய்
இந்த நிமிடம் இந்த ஸ்பரிசம்
நின்று நிலைக்கும் காலம் முழுதும்
கண்ணைப் படித்தேன்
விண்ணைப் படித்தேன்
உன்னைப் படிக்க இன்னும் முடியலையே
இன்னும் முடியலையே
கண்ணைப் படித்தேன்
விண்ணைப் படித்தேன்
உன்னைப் படிக்க இன்னும் முடியலையே
இன்னும் முடியலையே
சுற்றித் திரிந்தேன்
தித்தித்திருந்தேன்
சுற்றித் திரிந்தேன்
தித்தித்திருந்தேன்
எந்தன் இதயக் கதவை
ஏன் வந்து திறந்தாய்
கண்ணைப் படித்தேன்
விண்ணைப் படித்தேன்
உன்னைப் படிக்க இன்னும் முடியலையே
இன்னும் முடியலையே