Kannai Padithaen

Kannai Padithaen Song Lyrics In English


கண்ணைப் படித்தேன்
விண்ணைப் படித்தேன்
உன்னைப் படிக்க இன்னும் முடியலையே
இன்னும் முடியலையே

கண்ணைப் படித்தேன்
விண்ணைப் படித்தேன்
உன்னைப் படிக்க இன்னும் முடியலையே
இன்னும் முடியலையே

சுற்றித் திரிந்தேன்
தித்தித்திருந்தேன்

சுற்றித் திரிந்தேன்
தித்தித்திருந்தேன்
எந்தன் இதயக் கதவை
ஏன் வந்து திறந்தாய்

கண்ணைப் படித்தேன்
விண்ணைப் படித்தேன்
உன்னைப் படிக்க இன்னும் முடியலியே
இன்னும் முடியலையே

கண்ணைத் திறந்தாலும் மறந்தாலும்
தெரியிது உந்தன் உருவம் உயிர் உருவம்
இதயம் அதை வரையும்

கொஞ்சிச் சிரித்தாலும் தவித்தாலும்
இனிக்குது இந்தப் பருவம் இந்தப் பருவம்

அலை அலையாய் ஆசைகளை
அடுக்கடுக்காய் அனுப்புகிறாய்

கொஞ்சம் ரசித்து கொஞ்சம் ருசித்து
கொஞ்சி அணைத்தேன் காற்றில் மிதக்க

கண்ணைப் படித்தேன்
விண்ணைப் படித்தேன்
உன்னைப் படிக்க இன்னும் முடியலையே
இன்னும் முடியலையே


வட்ட வளையோடு கொலுசோடு
உன்னை இசைத்திட வரவா வண்ண நிலவே
தரவா தந்து பெறவா

சின்ன மழையாக வெயிலாக
தொட்டுத் தொட்டு
முத்தம் தரவா தாளம் இடவா

விழி அசைந்தால் உயிர் அசையும்
புது இசையை மீட்டுகிறாய்

இந்த நிமிடம் இந்த ஸ்பரிசம்
நின்று நிலைக்கும் காலம் முழுதும்

கண்ணைப் படித்தேன்
விண்ணைப் படித்தேன்
உன்னைப் படிக்க இன்னும் முடியலையே
இன்னும் முடியலையே

கண்ணைப் படித்தேன்
விண்ணைப் படித்தேன்
உன்னைப் படிக்க இன்னும் முடியலையே
இன்னும் முடியலையே

சுற்றித் திரிந்தேன்
தித்தித்திருந்தேன்

சுற்றித் திரிந்தேன்
தித்தித்திருந்தேன்
எந்தன் இதயக் கதவை
ஏன் வந்து திறந்தாய்

கண்ணைப் படித்தேன்
விண்ணைப் படித்தேன்
உன்னைப் படிக்க இன்னும் முடியலையே
இன்னும் முடியலையே