Kannamma Kannamma |
|---|
கண்ணம்மா கண்ணம்மா
பதில் சொல்லம்மா
பதில் சொல்லம்மா
என்னம்மா என்னம்மா
பாசம் வச்சதே ஒரு குத்தமா
உன்னை எண்ணிப் பார்க்காமலே
விட்டுத்தந்தேனே
என் காதலைதான் நானும்
இப்ப தத்துத் தந்தேனே
உன் கூரையில நானும்
வாழ ஆசைப்பட்டேனே
ஒரு பாசத்துக்கு நானும்
இப்போ வாக்கப்பட்டேனே
என் காதல் ஒரு காத்தாடியாய்
துள்ளி வந்ததே
அது பாசம் என்னும்
கம்பத்திலே மாட்டிக்கிட்டதே
நான் பட்டக்கடன் தீர்க்க
இப்ப நேரம் வந்ததே
அந்த நேரத்தில நம்ம
காதல் தூரம் போனதே
யாரோடு சாபமோ
வாழாத வரைத்தான் நம்ம
ரெண்டு பேரின்
நெஞ்சைக் குத்திக் கொள்ளுதே ஓ
கண்ணம்மா கண்ணம்மா
பதில் சொல்லம்மா
பதில் சொல்லம்மா
குத்தம்மா குத்தம்மா
ஆசை வச்சதே ஒரு குத்தம்மா
ஒத்த வார்த்தைக் கேட்கும்போதே
சொத்துப்போனேன்னே
நான் ஓடி வந்து
நிக்கும்போதே சாம்பல் ஆனேன்னே
உன்னைப் பார்த்து
என்னென்னமோ கேக்க வந்தேனே
என் வார்த்தையெல்லாம்
தொலைஞ்சி இப்ப
ஊமை ஆனேன்னே
என் காதல் தேரும்
தேரடியை சேரவில்லையே
உன் காலடியில்
நொருங்கிப்போச்சு தேரவில்லையே
என் துக்கத்துக்கு
மருந்த எங்கு இருக்கு
அடி திக்கி திக்கி பேசும்
உந்தன் கண்ணில் இருக்கு
யார் செஞ்ச பாவமோ
பாம்பாக மாறிதான்
நம்ம ரெண்டு பேரு
கால சுத்தி கெடக்கு
ஓஒ ஓஒஓஒஓஒ