Kannang Karunguyil |
---|
பாடலாசிரியர் : புலமைபித்தன்
கன்னங் கருங்குயில் சின்ன இளமயில் மெல்லச் சிரிக்குது முத்தை இறைக்குது ஏன் ஏன் ஏன்
கட்டிப் பிடியென வஞ்சிக்கொடி என வந்த ரதி மகள் தொட்ட இடங்களில் தேன் தேன் தேன்
உந்தன் தேகம் தேமாங்கனி நெஞ்சில் ஆடும் சிந்தாமணி உந்தன் தேகம் தேமாங்கனி நெஞ்சில் ஆடும் சிந்தாமணி
கன்னங் கருங்குயில் சின்ன இளமயில் மெல்லச் சிரிக்குது முத்தை இறைக்குது ஏன் ஏன் ஏன்
கட்டிப் பிடியென வஞ்சிக்கொடி என வந்த ரதி மகள் தொட்ட இடங்களில் தேன் தேன் தேன்
ஒரு ஆயிரம் கலைகள் படித்திடும் அபிநய விழிகள் இளம் காதலன் கரங்கள் உடலினில் எழுதிடும் சுரங்கள்
ஒரு ஆயிரம் கலைகள் படித்திடும் அபிநய விழிகள் இளம் காதலன் கரங்கள் உடலினில் எழுதிடும் சுரங்கள்
என்ன இசையோ என்ன சுகமோ இந்த சுகமே என்றும் வருமோ இனி நாளும் ஏகாதசி இரு கண்கள் தூங்காதடி
கன்னங் கருங்குயில் சின்ன இளமயில் மெல்லச் சிரிக்குது முத்தை இறைக்குது ஏன் ஏன் ஏன்
கட்டிப் பிடியென வஞ்சிக்கொடி என வந்த ரதி மகள் தொட்ட இடங்களில் தேன் தேன் தேன்
அடி பாற்கடல் அமுதே தினம் வரும் பௌர்ணமி நிலவே இரு கண்களின் கனவே இரவிலும் எனக்கொரு நிழலே
வெள்ளி முளைக்கும் எந்தன் கிழக்கே எந்தன் உயிரே என்றும் உனக்கே உந்தன் பார்வை தீபாவளி உந்தன் வார்த்தை கீதாஞ்சலி
கன்னங் கருங்குயில் சின்ன இளமயில் மெல்லச் சிரிக்குது முத்தை இறைக்குது ஏன் ஏன் ஏன்
கட்டிப் பிடியென வஞ்சிக்கொடி என வந்த ரதி மகள் தொட்ட இடங்களில் தேன் தேன் தேன்
இருவர் : ஆஆஹா ஹாஹா ஓஹோ ஓஒ ஹோ