Kanne Karuvizhiye |
---|
கண்ணே கருவிழியே
கலையா கனவே
இதமா என் மடியில் விழுந்த நிலவே
தெய்வங்கள் கேட்டாலும் கிடைக்காத
என் வரமே என் வரமே
கண்ணே கருவிழியே
கலையா கனவே
இதமா என் மடியில் விழுந்த நிலவே
ஜென்மங்கள் கேட்டாலும் கிடைக்காத
என் வரமே என் வரமே
நீ முதல் முறையா
அழும்போது
அம்மா நான் சிரிச்சேனே
உலகால வந்தாயே என் செல்வமே
நீ ஊர் உலகம் அறிஞ்சாலும்
தோள் ஒசர வளர்ந்தாலும்
என் மடியில் தாலாட்டி தாங்கிடுவேனே
ஆராரிரோ ஆரிராரோ
யாரோ யாரோ அடிச்சதாரோ
ஆராரிரோ ஆரிராரோ
யாரோ யாரோ அடிச்சதாரோ
வாய் மொழி வேணா குரல் வேணா
அறியாம இருப்பேனா
என் கருவின் வாசத்தா
நான் மறப்பேனா
இந்த பூலோகம் அழிஞ்சாலும்
பூங்காத்து எரிஞ்சாலும்
நான் கொடுக்கும் பாசத்த
கொறைச்சிடுவேனா
தான் ரத்தத்த உணவாக்கி
பொழுதெல்லாம் கனவாக்கி
பொழிஞ்சாலே பாசத்த
இது போல் வருமா
ஒரு தாய் இல்லா உலகத்த
முடி சூட்டி தந்தாலும்
தாலாட்டு பாட்டுக்கு ஈடாகுமா
ஆராரிரோ ஆரிராரோ
யாரோ யாரோ அடிச்சதாரோ
ஆராரிரோ ஆரிராரோ
யாரோ யாரோ அடிச்சதாரோ