Kanne Karuvizhiye

Kanne Karuvizhiye Song Lyrics In English


கண்ணே கருவிழியே
கலையா கனவே
இதமா என் மடியில் விழுந்த நிலவே
தெய்வங்கள் கேட்டாலும் கிடைக்காத
என் வரமே என் வரமே

கண்ணே கருவிழியே
கலையா கனவே
இதமா என் மடியில் விழுந்த நிலவே
ஜென்மங்கள் கேட்டாலும் கிடைக்காத
என் வரமே என் வரமே

நீ முதல் முறையா
அழும்போது
அம்மா நான் சிரிச்சேனே
உலகால வந்தாயே என் செல்வமே

நீ ஊர் உலகம் அறிஞ்சாலும்
தோள் ஒசர வளர்ந்தாலும்
என் மடியில் தாலாட்டி தாங்கிடுவேனே

ஆராரிரோ ஆரிராரோ
யாரோ யாரோ அடிச்சதாரோ
ஆராரிரோ ஆரிராரோ
யாரோ யாரோ அடிச்சதாரோ


வாய் மொழி வேணா குரல் வேணா
அறியாம இருப்பேனா
என் கருவின் வாசத்தா
நான் மறப்பேனா
இந்த பூலோகம் அழிஞ்சாலும்
பூங்காத்து எரிஞ்சாலும்
நான் கொடுக்கும் பாசத்த
கொறைச்சிடுவேனா

தான் ரத்தத்த உணவாக்கி
பொழுதெல்லாம் கனவாக்கி
பொழிஞ்சாலே பாசத்த
இது போல் வருமா

ஒரு தாய் இல்லா உலகத்த
முடி சூட்டி தந்தாலும்
தாலாட்டு பாட்டுக்கு ஈடாகுமா

ஆராரிரோ ஆரிராரோ
யாரோ யாரோ அடிச்சதாரோ
ஆராரிரோ ஆரிராரோ
யாரோ யாரோ அடிச்சதாரோ