Kanneeraiyum Senneeraiyum |
---|
கண்ணீரையும் செந்நீரையும் தண்ணீரைப் போல் பாய்ச்சினேனே வெந்நீரையா ஊற்றினேன் என் மீது ஏன்தான் கோபம் அம்மா தாய் போன்ற என் பூமியே சதி செய்ததோ சாமியே
கண்ணீரையும் செந்நீரையும் தண்ணீரைப் போல் பாய்ச்சினேனே வெந்நீரையா ஊற்றினேன்
ஊர் வாழ வேண்டி தான் வாழும் ஜாதி உயராததென்ன சமுதாய நீதி உழைக்கின்ற கை ஓய்வதோஓஓஒ உழைக்கின்ற கை ஓய்வதோ
ஆதாரம் இல்லை ஆகாரம் இல்லை அநியாயமாய் காய்வதோஓஓ அலை மோதினால் சின்ன தோணி என்ன ஆகும்
கண்ணீரையும் செந்நீரையும் தண்ணீரைப் போல் பாய்ச்சினேனே வெந்நீரையா ஊற்றினேன்
உரம் வாங்கி போட்டால் தரமாக இல்லை கடன் வாங்கி போட்டால் தீராத தொல்லை வெறும் வாயைத்தான் மெல்வதோஓஓஒ வெறும் வாயைத்தான் மெல்வதோ
விலை மாறவில்லை நிலை மாறவில்லை பரிதாபமாய் ஆனதோ வேர்வைகளே உங்கள் தாகம் என்று தீரும்
கண்ணீரையும் செந்நீரையும் தண்ணீரைப் போல் பாய்ச்சினேனே வெந்நீரையா ஊற்றினேன் என் மீது ஏன்தான் கோபம் அம்மா தாய் போன்ற என் பூமியே சதி செய்ததோ சாமியே