Kanni Magal Kannimaigal |
---|
ஆஅஆஅஆஆஆ
கன்னி மகள் கண்ணிமைகள் கவிதை சொல்வதென்ன கன்னி மகள் கண்ணிமைகள் கவிதை சொல்வதென்ன
இவள் காலளந்த நடையில் இடை நூலந்ததென்ன நூலந்ததென்ன கன்னி மகள் கண்ணிமைகள் கவிதை சொல்வதென்ன
பாலாழி தனிலாடும் கரு நாவல் கனியொன்று கண்ணென்று பேர் கொண்டதோ கோவை கனியென்று கிளியொன்று கண்ணே உன் முன் வந்து இதழோடு போர் கொண்டதோ
ஆளான பெண்ணென்று சொல்லாமல் சொல்கின்ற முந்தானை அழைக்கின்றது இவள் பூவாக பொன்னாக தேராக வரும்போது என்னுள்ளம் அசைகின்றது என்னுள்ளம் அசைகின்றது கன்னி மகள் கண்ணிமைகள் கவிதை சொல்வதென்ன
ஆஅஆஅஆ
கருங்கூந்தல் அலை பாய அது கண்டு கடலோர அலை யாவும் கண்ணீர் விடும் அல்லி மலர் போன்ற சிறு பாதம் பதிகின்ற பொழுதங்கே முள் கூட பூவாகுமே
இதமான இசையாலே வசமான புகழ்மாலை பல கண்டும் நிறைவில்லையே இன்று இவள் கேட்க நான் பாட இதயங்கள் இணைந்தாடும் சுகம் போல சுகமில்லையே சுகம் போல சுகமில்லையே
கன்னி மகள் கண்ணிமைகள் கவிதை சொல்வதென்ன இவள் காலளந்த நடையில் இடை நூலந்ததென்ன நூலந்ததென்னஎன்ன