Kanni Tamizho Kamban Kaviyo |
---|
பாடலாசிரியர் : வைரமுத்து
கன்னித் தமிழோ கம்பன் கவியோ மின்னல் சரமோ புது மேக ரதமோ அழகே கொஞ்சும் மேனகை விழிகள் தந்த தாரகை
மண்ணில் வந்த ரம்பை அவள் மங்கை அந்த கங்கை மகள் தேவதை ஊர்வசியோஓஓ பூவோ பெண் பொன் வண்ணமோ
கன்னித் தமிழோ கம்பன் கவியோ மின்னல் சரமோ புது மேக ரதமோ அழகே கொஞ்சும் மேனகை விழிகள் தந்த தாரகை
பால் போல முகம் சேல் போல விழி நூல் போல இடை பூம்பாதம் வரை படைப்பினில் அவள் ஒரு அதிசயமே
மன்மதனும் கண் மயங்கும் பொன்னிழைத்த மின்னல் சரம் கண் இமைக்குள் என் உயிரை கட்டி வைத்த தங்க ரதம்
கற்பனையில் உள்ள சுகம் அற்புதங்கள் செய்யும் நிதம் அது ஒரு ரகசியமே ஓஓ என் எதிர்காலமே
கன்னித் தமிழோ கம்பன் கவியோ மின்னல் சரமோ புது மேக ரதமோ அழகே கொஞ்சும் மேனகை விழிகள் தந்த தாரகை
வான் மேகம் அது தேன் தூவி வர பூந்தேவதைக்கு நான் மாலையிட மதிமுக ரதி அவள் தலை குனிவாள்
வெள்ளி மலர் பஞ்சணையில் மெல்ல மெல்ல கையணைத்து முல்லையிதழ் முத்தங்களில் உள்ளிருக்கும் தேன் எடுத்து
அள்ளி அள்ளி பங்கு வைத்து அங்கம் எங்கும் பொங்க வைத்து இளமையை ரசித்துடுவேன் ஆஆ என் ஆனந்தமே
கன்னித் தமிழோ கம்பன் கவியோ மின்னல் சரமோ புது மேக ரதமோ அழகே கொஞ்சும் மேனகை விழிகள் தந்த தாரகை