Kathal Nilavey |
|---|
காதல் நிலாவே பூவே
கை மீது சேர வா
ஆசைக் கனாவே வாழ்வே
ஆவல்கள் தீர வா
மணி ஊஞ்சல் தானாட
அதன் மேலே நானாட
இள மாலை நேரம்தான்
காதல் நிலாவே பூவே
கை மீது சேர வா
ஆசைக் கனாவே வாழ்வே
ஆவல்கள் தீர வா
ஏட்டில் ஒரு பாவலன்
எழுதாத காவியம்
நாட்டில் ஒரு தூரிகை
புனையாத ஓவியம்
நீ வளர்க்க என் கண்
தேடுது உன் சொந்தம்
தேன் வளர்க்க என் வாய்
பாடுது உன் சந்தம்
நீராடும் ஓடையே
எனக்கென குளிர் சேர்க்கும் வாடையே
மோகம் எந்நாளும் என்னை வாட்டுதே
அன்பே வா ஆ ஆ
காதல் நிலாவே பூவே
கை மீது சேர வா
ஆசைக் கனாவே வாழ்வே
ஆவல்கள் தீர வா
மணி ஊஞ்சல் தானாட
அதன் மேலே நானாட
இள மாலை நேரம்தான்
காதல் நிலாவே பூவே
கை மீது சேர வா
நாளும் உனைக் கூவிடும்
குயிலாக பூங்குயில்
நீயும் எனை வாட்டினால்
உறவேது பூமியில்
நான் விரும்பும் பொன் மான்
தாமரை நெஞ்சம்
நாள் முழுக்க என் மேல்
சாய்ந்திடக் கெஞ்சும்
சேராது உன் மடி
தனிமையில் தூங்காது பூங்கொடி
கூடும் சந்தோஷம் இன்று வாய்த்ததே
அன்பே வா ஆ ஆ
காதல் நிலாவே பூவே
கை மீது சேர வா
ஆசைக் கனாவே வாழ்வே
ஆவல்கள் தீர வா
மணி ஊஞ்சல் தானாட
அதன் மேலே நானாட
இள மாலை நேரம்தான்
காதல் நிலாவே பூவே
கை மீது சேர வா
ஆசைக் கனாவே
வாழ்வே ஆவல்கள் தீர வா