Kathiruntha Kangale

Kathiruntha Kangale Song Lyrics In English


காத்திருந்த கண்களே
கதையளந்த நெஞ்சமே
ஆசை என்னும் வெள்ளமே
பொங்கி பெருகும் உள்ளமே

காத்திருந்த கண்களே
கதையளந்த நெஞ்சமே
ஆசை என்னும் வெள்ளமே
பொங்கி பெருகும் உள்ளமே

கண்ணிரண்டில் வெண்ணிலா
கதைகள் சொல்லும் பெண்ணிலா
கண்ணிரண்டில் வெண்ணிலா
கதைகள் சொல்லும் பெண்ணிலா
நானிருந்தும் நீயிலா வாழ்வில் ஏது தேனிலா

கண்ணிரண்டில் வெண்ணிலா
கதைகள் சொல்லும் பெண்ணிலா
நானிருந்தும் நீயிலா வாழ்வில் ஏது தேனிலா

மைவிழி வாசல் திறந்ததிலே
ஒரு மன்னவன் நுழைந்ததென்ன
அவன் வருவதினாலே இந்த இதழ்களின் மேலே
புன்னகை விளைந்ததென்ன

பொழுதொரு கனவை விழிகளிலே
கொண்டு வருகின்ற வயதல்லவோ
பொழுதொரு கனவை விழிகளிலே
கொண்டு வருகின்ற வயதல்லவோ
ஒரு தலைவனை அழைத்து தனி இடம் பார்த்து
தருகின்ற மனதல்லவோ தருகின்ற மனதல்லவோ


காத்திருந்த கண்களே
கதையளந்த நெஞ்சமே
ஆசை என்னும் வெள்ளமே
பொங்கி பெருகும் உள்ளமே

கைவிரலாலே தொடுவதிலே
இந்த பூமுகம் சிவந்ததென்ன
இரு கைகளினால் நீ முகம் மறைத்தால்
இந்த வையகம் இருண்டதென்ன

செவ்விதழோரம் தேனெடுக்க
இந்த நாடகம் நடிப்பதென்ன
என்னை அருகினில் அழைத்து
இரு கரம் அணைத்து
மயக்கத்தை கொடுப்பதென்ன
மயக்கத்தை கொடுப்பதென்ன

காத்திருந்த கண்களே
கதையளந்த நெஞ்சமே
ஆசை என்னும் வெள்ளமே
பொங்கி பெருகும் உள்ளமே

இருவர் : லால்ல லால்லா லா லா லா
லால்ல லால்லா லா லா லா
லால்ல லால்லா லா லா லா
லால்ல லால்லா லால்லா