Kathirvel Nayagane |
---|
கதிர்வேல் நாயகனே உன்னையே வேண்டுகிறேன் நன்மையே நீ தருவாய் நாளெல்லாம் காத்திருப்பேன்
கதிர்வேல் நாயகனே உன்னையே வேண்டுகிறேன்
கோபுரம் நான்கு வைத்தாய் கோயிலோ ஒன்று வைத்தாய் ஒன்றிலே கலசம் வைத்தாய் மூன்றிலே மயக்கம் வைத்தாய் என்னையே சேர்த்து வைத்தாய் என்றும் நீ துணை இருப்பாய்
கதிர்வேல் நாயகனே உன்னையே வேண்டுகிறேன் நன்மையே நீ தருவாய் நாளெல்லாம் காத்திருப்பேன்
ஓர் பிள்ளை குலவிளக்கு ஓர் மகள் திருவிளக்கு தங்கையோ தெரு விளக்கு தம்பியோ தனி வழக்கு நான்குமே சரண் உனக்கு நல்குவாய் புதுக் கணக்கு
கதிர்வேல் நாயகனே உன்னையே வேண்டுகிறேன் நன்மையே நீ தருவாய் நாளெல்லாம் காத்திருப்பேன்
என்னதான் நீ நடத்து என்றும் நான் உனை மறவேன் நாளைக்கு துணை வருவாய் நம்பித்தான் வாழுகிறேன் தும்பிக்கை தம்பி ஐயா நம்பிக்கை வையுமைய்யா
வாசமலரை காவல் புரிந்து நில்லையா போகும் வழியில் நல்ல வழிகள் சொல்லையா நாலு மலரும் வாழ்ந்து நல்ல குணங்கள் சேர்ந்து தாயின் பெருமை காத்து நிற்கும் வேலய்யா கந்தையா கதிர்காம வேலய்யா
கதிர்வேல் நாயகனே உன்னையே வேண்டுகிறேன் நன்மையே நீ தருவாய் நாளெல்லாம் காத்திருப்பேன்