Maayavi |
|---|
இசை அமைப்பாளர் : கிருஷ்ண குமார்
மாயாவி மாயாவி
தீயாகி வருவான்
மனதோடும் முகமூடி
அணிந்தே தான் திரிவான்
தலை தொடும் அலையென
எழுந்திடுவான் – நெஞ்சில்
இணைத்திடும் மழையென
நனைத்திடுவான்
மாயாவி மாயாவி
தீயாகி வருவான்
மனதோடும் முகமூடி
அணிந்தே தான் திரிவான்
பயம் மூளும் நேரம்
தரை வந்து காப்பான்
துயர் கொண்ட பேரை
கரை கொண்டு சேர்ப்பான்
கடமை முடிந்தால்
பறந்திடுவான் – பாவி
இவளின் துயரம் மறந்திடுவான்
அவனோடிவள் இதயம் தொலையும்
தனிமைத் தெருவில்
இவளோடவன் நிழலும் அலையும்
மாயாவி மாயாவி
தீயாகி வருவான்
மனதோடும் முகமூடி
அணிந்தே தான் திரிவான்
தலை தொடும் அலையென
எழுந்திடுவான் – நெஞ்சில்
இணைத்திடும் மழையென
நனைத்திடுவான்
எழுநூறு கோடி
முகம் இங்கு உண்டு
அழகான ஒன்றை
எவர் கண்டது உண்டு
மனதோர் உருவம்
வரைகிறதே – காற்றில்
கனவாய் அதுவும் கரைகிறதே
கொடுமை அதில் கொடுமை எதுவோ
விழிகளில் இருந்தும்
உனை காணவே முடியாததுவோ
மாயாவி மாயாவி
தீயாகி வருவான்
மனதோடும் முகமூடி
அணிந்தே தான் திரிவான்
தலை தொடும் அலையென
எழுந்திடுவான் – நெஞ்சில்
இணைத்திடும் மழையென
நனைத்திடுவான்
