Maayavi

Maayavi Song Lyrics In English


இசை அமைப்பாளர் : கிருஷ்ண குமார்

மாயாவி மாயாவி
தீயாகி வருவான்
மனதோடும் முகமூடி
அணிந்தே தான் திரிவான்

தலை தொடும் அலையென
எழுந்திடுவான் – நெஞ்சில்
இணைத்திடும் மழையென
நனைத்திடுவான்

மாயாவி மாயாவி
தீயாகி வருவான்
மனதோடும் முகமூடி
அணிந்தே தான் திரிவான்

பயம் மூளும் நேரம்
தரை வந்து காப்பான்
துயர் கொண்ட பேரை
கரை கொண்டு சேர்ப்பான்

கடமை முடிந்தால்
பறந்திடுவான் – பாவி
இவளின் துயரம் மறந்திடுவான்
அவனோடிவள் இதயம் தொலையும்
தனிமைத் தெருவில்
இவளோடவன் நிழலும் அலையும்

மாயாவி மாயாவி
தீயாகி வருவான்
மனதோடும் முகமூடி
அணிந்தே தான் திரிவான்


தலை தொடும் அலையென
எழுந்திடுவான் – நெஞ்சில்
இணைத்திடும் மழையென
நனைத்திடுவான்

எழுநூறு கோடி
முகம் இங்கு உண்டு
அழகான ஒன்றை
எவர் கண்டது உண்டு

மனதோர் உருவம்
வரைகிறதே – காற்றில்
கனவாய் அதுவும் கரைகிறதே
கொடுமை அதில் கொடுமை எதுவோ
விழிகளில் இருந்தும்
உனை காணவே முடியாததுவோ

மாயாவி மாயாவி
தீயாகி வருவான்
மனதோடும் முகமூடி
அணிந்தே தான் திரிவான்

தலை தொடும் அலையென
எழுந்திடுவான் – நெஞ்சில்
இணைத்திடும் மழையென
நனைத்திடுவான்