Manathil Ore Oru Poo |
---|
மனதில் ஒரே ஒரு பூ பூத்தது பூ பூத்தது மனதில் ஒரே ஒரு பூ பூத்தது பூ பூத்தது மலரும் நினைவுகள் நான் சொல்வது மனதில் ஒரே ஒரு பூ பூத்தது மனதில் ஒரே ஒரு பூ பூத்தது
குழலூதும் கண்ணனின் வண்ண மேனி கதை சொல்வான் கண்களில் அந்த ஞானி வலை வீசும் கனவிலே வந்து போவான் கலைமானின் நெஞ்சிலே சொந்தமாவான்
தாயாக மாறும் அவன் தாலாட்டு பாட்டு சேயாகும் எனது மனம் தேனூறக் கேட்டு குரலில் சங்கீதம் கூடு கட்டும் அங்கே குரலில் சங்கீதம் கூடு கட்டும் அங்கே இதயம் சிறகடிக்கும் என் வீட்டிலே
மனதில் ஒரே ஒரு பூ பூத்தது பூ பூத்தது மலரும் நினைவுகள் நான் சொல்வது மனதில் ஒரே ஒரு பூ பூத்தது மனதில் ஒரே ஒரு பூ பூத்தது லலலாலா லலலாலா லலலாலா லல லல லாலா
மணிமார்பில் மழலை போல் தூங்க வேண்டும் விடிந்தாலே நான் தினம் ஏங்க வேண்டும் வழி பார்த்து வாசலில் காக்க வேண்டும் என் மன்னன் அன்பிலே தோற்க வேண்டும்
ஆண் பிள்ளை பணிந்து விடக் கூடாது பெண்ணே கொத்தடிமைப் பழக்கமெல்லாம் ஆகாது கண்ணே ஆடவன் அடங்கினால் மீசை அது எதுக்கு ஆடவன் அடங்கினால் மீசை அது எதுக்கு தனியே பார்த்தால் இதை நீ பேசுவாய்
மனதில் ஒரே ஒரு பூ பூத்தது பூ பூத்தது மலரும் நினைவுகள் நான் சொல்வது மனதில் ஒரே ஒரு பூ பூத்தது மனதில் ஒரே ஒரு பூ பூத்தது