Manathil Uruthi Vendum |
---|
பாடகர் : கே ஜே யேசுதாஸ்
பாடலாசிரியர் : வாலி
மனதில் உறுதி வேண்டும் வார்த்தையிலே தெளிவும் வேண்டும் மனதில் உறுதி வேண்டும் வார்த்தையிலே தெளிவும் வேண்டும் உணர்ச்சி என்பது வேண்டும் ஒளிப்படைத்த பார்வை வேண்டும் ஞானதீபம் ஏற்ற வேண்டும்
மனதில் உறுதி வேண்டும் வார்த்தையிலே தெளிவும் வேண்டும் மனதில் உறுதி வேண்டும் மனதில் உறுதி வேண்டும்
இறைவனும் பலவித தடைகளை தகர்த்திங்கு வாழ்ந்துக் காட்ட வேண்டும் இலக்கிய பெண்மைக்கு இலக்கணம் நீயென யாரும் போற்ற வேண்டும்
மாதர் தம்மை கேலி பேசும் மூடர் வாயை மூடுவோம் மானம் காக்கும் மாந்தர் யார்க்கும் மாலை வாங்கி போடுவோம் வீடு காக்கும் பெண்ணை வாழ்த்தி நாடும் ஏடும் பேச வேண்டும்
மனதில் உறுதி வேண்டும் வார்த்தையிலே தெளிவும் வேண்டும் மனதில் உறுதி வேண்டும் மனதில் உறுதி வேண்டும்
சமைக்கின்ற கரங்களும் சரித்திரம் படைப்பதை பூமி பார்க்க வேண்டும் தூரத்து தேசத்தில் பாரத பெண்மையும் பாட கேட்க வேண்டும்
பெண்கள் கூட்டம் பேய்கள் என்று பாடல் சொன்ன சித்தர்களும் ஈன்ற தாயும் பெண்மை என்று எண்ணிடாத பித்தர்களே ஏசினாலும் பேசினாலும் அஞ்சிடாமல் வாழ வேண்டும்
மனதில் உறுதி வேண்டும் வார்த்தையிலே தெளிவும் வேண்டும் மனதில் உறுதி வேண்டும் மனதில் உறுதி வேண்டும்