Manna Nambi |
---|
இசை அமைப்பாளர் : மாஸ்டர் வேணு
பாடல் ஆசிரியர் : கேஎஸ் கோபாலகிருஷ்ணன்
மண்ண நம்பி மரம் இருக்கு கண்ணே சஞ்சலா உன்னை நம்பி நான் இருக்கேன் ஷோக்காக் கொஞ்சலாம் உலக இன்ப வெள்ளத்திலே ஒண்ணா நீஞ்சலாம் இந்த உலக இன்ப வெள்ளத்திலே ஒண்ணா நீஞ்சலாம்
என்னை நம்பி நீ இருக்க சுந்தர மாமா உன் அன்பை நம்பி நான் இருக்கேன் சிங்கார மாமா உன் எண்ணம்போல நடந்திடுவேன் ஒய்யார மாமா
கொஞ்ச நஞ்ச ஆசையில்ல உந்தன் மேலே கோயில் கட்டி கும்பிடுவேன் ஆசையாலே அஞ்சு காணி நிலமிருக்கு சொந்த ஊரிலே அஞ்சாமே எழுதி வைப்பேன் உந்தன் பேரிலே
மண்ண நம்பி மரம் இருக்கு கண்ணே சஞ்சலா உன்னை நம்பி நான் இருக்கேன் ஷோக்காக் கொஞ்சலாம்
வெட்டி பேச்சு பேசாதே தங்க மாமா வெளிச்சம் போட்டு ஏமாத்த எண்ணலாமா கெட்டிகார ஆம்பள நீ சுந்தர மாமா ஒரு பொட்டு தங்கம் கொடுத்ததாக சொல்ல முடியுமா
என்னை நம்பி நீ இருக்க சுந்தர மாமா உன் அன்பை நம்பி நான் இருக்கேன் சிங்கார மாமா
வந்த வேலை ஆனவுடன் அழகு மானே கும்பகோணம் புறப்படுவேன் புள்ளி மானே அந்தி வேளை திரும்பிடுவேன் கொம்பு தேனே வந்தவுடன் எந்தன் உள்ளம் தெரியும் தானே
மண்ண நம்பி மரம் இருக்கு கண்ணே சஞ்சலா உன்னை நம்பி நான் இருக்கேன் ஷோக்காக் கொஞ்சலாம்
கும்பகோணம் போனவுடன் சுப்பு மாமா குரங்கு சம்பா அரிசி கொண்டு வரணும் மாமா ரொம்ப நேரம் அந்த ஊரில் தங்கி விட்டாலே உன்னை நம்பி வாழும் எந்தன் ஆவி போகும் தன்னாலே
என்னை நம்பி நீ இருக்க சுந்தர மாமா உன் அன்பை நம்பி நான் இருக்கேன் சிங்கார மாமா உன் எண்ணம்போல நடந்திடுவேன் ஒய்யார மாமா