Mella Varum Kaatru

Mella Varum Kaatru Song Lyrics In English


மெல்ல வரும் காற்று
சொல்லித் தரும் பாட்டு
கண்ணென்ற மொழி பார்த்து
பெண்ணென்ற சுருதி சேர்த்து

மெல்ல வரும் காற்று
சொல்லித் தரும் பாட்டு
கண்ணென்ற மொழி பார்த்து
பெண்ணென்ற சுருதி சேர்த்து

ஆனிப்பொன் மேனியை
ஆசையில் அணைத்திட
காணிக்கை கொடுத்ததும்
நேற்றல்லவோ
பனிமலர் அழகினில்
மயங்கிட அருகினில்
வந்தால் இன்றே வா

மெல்ல வரும் காற்று
சொல்லித் தரும் பாட்டு
கண்ணென்ற மொழி பார்த்து
பெண்ணென்ற சுருதி சேர்த்து

தலைவன் தலைவி விழியால்
மொழிந்தால் பாடல்
தனியே பிரிந்தே
தழுவாதிருந்தால் ஊடல்
அவனும் அவளும் சிலையாய்
இருந்தால் கோவில்
இதயம் முழுதும்
அன்பாய் இருந்தால் காதல்

காதலன் பேசிட
மாதுளம்பூவினில்
தேன் துளி
கொடுத்ததும் நீயல்லவோ
உனக்குள்ள மயக்கத்தில்
எனக்குள்ள பாக்கியை
தந்தால் இன்றே தாஆஆ

மெல்ல வரும் காற்று
சொல்லித் தரும் பாட்டு
கண்ணென்ற மொழி பார்த்து
பெண்ணென்ற சுருதி சேர்த்து


மலர்ந்தாள் கனிந்தாள்
மடிமேல் விழுந்தாள் பாவை

மெதுவாய் படரும் கொடிபோல்
வளைந்தாள் தோகை

யாருமில்லாதொரு
நேரத்திலே உன்னை
வாவென அழைத்ததும்
நானல்லவோ
நாளென்ன பொழுதென்ன
ஆரம்பப் பாடத்தை
சொன்னால் இன்றே சொல்

மெல்ல வரும் காற்று
சொல்லித் தரும் பாட்டு
கண்ணென்ற மொழி பார்த்து
பெண்ணென்ற சுருதி சேர்த்து

இருவர் : லலல லலல லல லா லா
லலல லலல லல லா லா