Meni Kodhikkuthadi

Meni Kodhikkuthadi Song Lyrics In English


மேனி கொதிக்குதடி மின்னல் துடிக்கையிலே வானம் சிரிப்பதென்ன உந்தன் வாழ்க்கை அழுவதென்ன உள்ளம் இங்கே நோகிறது உலகம் எங்கே போகிறதுஊ

மேனி கொதிக்குதடி

உதிர்ந்த உதிரிப் பூவா பெண் உலர்ந்து காய்ந்த கனியா எருகில் எரிந்த இலையா பெண் உருகும் மெழுகு திரியா

நிலவே ஒளியே கேள் அவர் கதைகளையே கடலே அலையே கேள் அவர் நிலைகளையே

கேட்டால் பொறுக்காதே அதை கேட்டே வெறுக்காதே கேட்டால் பொறுக்காதே அதை கேட்டே வெறுக்காதே

உதிர்ந்த உதிரிப் பூவா பெண் உலர்ந்து காய்ந்த கனியா உதிர்ந்த உதிரிப் பூவா

மனிதர் வாழ்வை மனிதர் பறிக்கும் வழக்கம் இங்கேதான் மனது நோக மகிழ்ந்து ரசிக்கும் வாழ்க்கை இங்கேதான்

கவிதை கோடி எனக்குத் தந்த கண்ணில் கண்ணீரா பேதை செய்த குற்றம் என்ன கண்ணில் கண்டீரா

பாவம் செய்யாதவன் அவள் மேல் கல் வீசலாம் துரோகம் செய்யாதவன் தூய்மைதனை பேசலாம் மனிதாஆ மனிதாஆ

உதிர்ந்த உதிரிப் பூவா பெண் உலர்ந்து காய்ந்த கனியா உதிர்ந்த உதிரிப் பூவா


சலவை செய்யும் மனிதன் நாவில் சீதை அழுக்கானாள் தலையை ஆட்டும் மனிதர் சதியால் பேதை வழக்கானாள்

நெருப்பின் மேலே நடக்கச் சொல்லும் ராமாயணம்தானே நிதமும் நிதமும் நடக்குதிங்கே ஆமாம் நிஜம்தானே

கவிதை தந்த பைங்கிளி கண்ணீர் சிந்தி வாடவோ காலம் என்னும் வாசலில் தீயோர் ஆட்டம் போடவோ மனிதாஆ மனிதாஆ

உதிர்ந்த உதிரிப் பூவா பெண் உலர்ந்து காய்ந்த கனியா எருகில் எரிந்த இலையா பெண் உருகும் மெழுகு திரியா

நிலவே ஒளியே கேள் அவர் கதைகளையே கடலே அலையே கேள் அவர் நிலைகளையே

கேட்டால் பொறுக்காதே அதை கேட்டே வெறுக்காதே கேட்டால் பொறுக்காதே அதை கேட்டே வெறுக்காதே

உதிர்ந்த உதிரிப் பூவா பெண் உலர்ந்து காய்ந்த கனியா எருகில் எரிந்த இலையா பெண் உருகும் மெழுகு திரியா