Meni Kodhikkuthadi |
---|
மேனி கொதிக்குதடி மின்னல் துடிக்கையிலே வானம் சிரிப்பதென்ன உந்தன் வாழ்க்கை அழுவதென்ன உள்ளம் இங்கே நோகிறது உலகம் எங்கே போகிறதுஊ
மேனி கொதிக்குதடி
உதிர்ந்த உதிரிப் பூவா பெண் உலர்ந்து காய்ந்த கனியா எருகில் எரிந்த இலையா பெண் உருகும் மெழுகு திரியா
நிலவே ஒளியே கேள் அவர் கதைகளையே கடலே அலையே கேள் அவர் நிலைகளையே
கேட்டால் பொறுக்காதே அதை கேட்டே வெறுக்காதே கேட்டால் பொறுக்காதே அதை கேட்டே வெறுக்காதே
உதிர்ந்த உதிரிப் பூவா பெண் உலர்ந்து காய்ந்த கனியா உதிர்ந்த உதிரிப் பூவா
மனிதர் வாழ்வை மனிதர் பறிக்கும் வழக்கம் இங்கேதான் மனது நோக மகிழ்ந்து ரசிக்கும் வாழ்க்கை இங்கேதான்
கவிதை கோடி எனக்குத் தந்த கண்ணில் கண்ணீரா பேதை செய்த குற்றம் என்ன கண்ணில் கண்டீரா
பாவம் செய்யாதவன் அவள் மேல் கல் வீசலாம் துரோகம் செய்யாதவன் தூய்மைதனை பேசலாம் மனிதாஆ மனிதாஆ
உதிர்ந்த உதிரிப் பூவா பெண் உலர்ந்து காய்ந்த கனியா உதிர்ந்த உதிரிப் பூவா
சலவை செய்யும் மனிதன் நாவில் சீதை அழுக்கானாள் தலையை ஆட்டும் மனிதர் சதியால் பேதை வழக்கானாள்
நெருப்பின் மேலே நடக்கச் சொல்லும் ராமாயணம்தானே நிதமும் நிதமும் நடக்குதிங்கே ஆமாம் நிஜம்தானே
கவிதை தந்த பைங்கிளி கண்ணீர் சிந்தி வாடவோ காலம் என்னும் வாசலில் தீயோர் ஆட்டம் போடவோ மனிதாஆ மனிதாஆ
உதிர்ந்த உதிரிப் பூவா பெண் உலர்ந்து காய்ந்த கனியா எருகில் எரிந்த இலையா பெண் உருகும் மெழுகு திரியா
நிலவே ஒளியே கேள் அவர் கதைகளையே கடலே அலையே கேள் அவர் நிலைகளையே
கேட்டால் பொறுக்காதே அதை கேட்டே வெறுக்காதே கேட்டால் பொறுக்காதே அதை கேட்டே வெறுக்காதே
உதிர்ந்த உதிரிப் பூவா பெண் உலர்ந்து காய்ந்த கனியா எருகில் எரிந்த இலையா பெண் உருகும் மெழுகு திரியா