Moongililae Paatisaikum |
|---|
மூங்கிலிலே பாட்டிசைக்கும்
காற்றலையை தூதுவிட்டேன்
அவள் முகவடிவை மனம் பார்த்தபின்னே
அந்த பௌர்ணமியை இவன் ரசிப்பதில்லை
அவள் முகவடிவை மனம் பார்த்தபின்னே
அந்த பௌர்ணமியை இவன் ரசிப்பதில்லை
மூங்கிலிலே பாட்டிசைக்கும்
காற்றலையை தூதுவிட்டேன்
இரு விழி கவிதை தினசரி படித்தேன்
பொருள் அதை அறிய வழி ஏதும் இல்லை
ஆஆ ஆ ஆஆ
இரு விழி கவிதை தினசரி படித்தேன்
பொருள் அதை அறிய வழி ஏதும் இல்லை
புதுப்புது வார்த்தை
தினம் தினம் தேடி
பார்வையில் அமுதாய் அவள் வடிப்பாள்
நீர் அலைப்போலவே நீல விழிக்கோலங்கள்
நெஞ்சை நீராட்டவே நெருடி தாலாட்டவே
என் கற்பனைக்கு விதை தூவினாள் ஓய் ஓய் ஓய் ஓய்
என் கற்பனைக்கு விதை தூவினாள்
மூங்கிலிலே ஆ ஆ ஆ ஆ
பாட்டிசைக்கும் ஹோ ஹோ ஹோ ஹோ
காற்றலையை ஏ ஏ ஏ ஏ
தூதுவிட்டேன் தர தரர தரர தரர
ஆடை ஒன்றை எடுத்து தென்றலுக்கு உடுத்த
மின்னலென நெளிந்த மேனகையோ
ஆ ஆ ஆஆஆ
ஆடை ஒன்றை எடுத்து தென்றலுக்கு உடுத்த
மின்னலென நெளிந்த மேனகையோ
செங்கரும்புச்சாரும் செவ்விதழில் தானே
இனிப்பெனும் சுவையை கற்றுக்கொண்டது ஆ ஆ ஆ
மாது இதழ் இடத்திலே மாதுளங்கனி
முத்தை சிவப்பாக்கவே மா தவம் செய்தது
அவள் வரம் தரவே செந்நிறமானது ஒஒய் ஓய் ஓய் ஓய்
அவள் வரம் தரவே செந்நிறமானது
மூங்கிலிலே பாட்டிசைக்கும்
காற்றலையைதூதுவிட்டேன்
அவள் முகவடிவை மனம் பார்த்த பின்னே
அந்த பௌர்ணமியை இவன் ரசிப்பதில்லை
லலலலலல ரரர ர ர ரல ரரர ரரர
