Naal Varudhu |
---|
நாள் வருது நாள் வருது உன் மடியில் மழலை தவழ சீர் வருது சீர் வருது உன் தலைவன் மனது மகிழ
வளையல் வண்ண வளையல் உன் கையிலே குலுங்குது பொதையல் ஒரு பொதையல் உன் வயிற்றில் உறங்குது
கஸ்தூரி மான்குட்டி நாளை வரும் கைவீசி போகின்ற வேளை வரும்
நம் வீட்டுத் தோட்டத்து ரோசா செடி நமது ஆசைப்படி நாள் பார்த்து பூ ஒண்ணு பூத்தாச்சடி அரும்பு பார்த்தாச்சடி
மணக்குதடி மனசுக்குள்ளே ஹோய் உதட்டுக்கனி செவத்தப் புள்ள புளிப்பும் இனி இனிக்கும் இந்த கிளியின் வாயிலே சுமையும் ஒரு சுகம்தான் அதை நினைக்கும் போதிலே
நாள் வருது நாள் வருது உன் மடியில் மழலை தவழ சீர் வருது சீர் வருது உன் தலைவன் மனது மகிழ
வளையல் வண்ண வளையல் உன் கையிலே குலுங்குது பொதையல் ஒரு பொதையல் உன் வயிற்றில் உறங்குது
கஸ்தூரி மான்குட்டி நாளை வரும் கைவீசி போகின்ற வேளை வரும்
தூங்காமல் நீ தேடும் சொந்தம் இது இனிய பந்தம் இது நீ வாழ்ந்த வாழ்க்கைக்கு பொருளானது உனது நிழலானது
இருவருக்கும் முதல் இரவு ஹேஅது கொடுத்த பதில் வரவு மகனா அது மகளா கொஞ்சம் தெரிந்து சொல்லடி அடியே வஞ்சிக் கொடியே வெட்கம் இன்னும் ஏனடி