Naan Isaikkum Ragam |
---|
கண் அசைந்தால் காலை பிறக்கும் ஹ்ம்ம் ம்ம் ம்ம் ஆ ஆ ஆ ஆ தென் அசைந்தால் நடை பிறக்கும் என் வாய் அசைந்தால் பாடல் வரும் நீ அசைந்தால் ஆடல் வரும் நிலா நீ அசைந்தால் ஆடல் வரும்
நான் இசைக்கும் ராகமெல்லாம் அவன் தந்த யோகம் ஆஆஆ நான் இசைக்கும் ராகமெல்லாம் அவன் தந்த யோகம் மான் விழியுன் தேகமெல்லாம் மயிலெனும் புஷ்பராகம் மான் விழியுன் தேகமெல்லாம் மயிலெனும் புஷ்பராகம்
நான் இசைக்கும் ராகமெல்லாம் அவன் தந்த யோகம்
படிக்காத பாடத்திலே பரீட்சை வைத்துவிட்டு நடிக்காத நாடகத்தில் நாயகியாய் வந்தவளே படிக்காத பாடத்திலே பரீட்சை வைத்துவிட்டு நடிக்காத நாடகத்தில் நாயகியாய் வந்தவளே எவரெவர்க்கு எது தொழிலோ அவரால்தான் சிறக்குமடி எவரெவர்க்கு எது தொழிலோ அவரால்தான் சிறக்குமடி
இமைப் பொழுதில் பறித்தாயே என் மனதை தந்திடடி இமைப் பொழுதில் பறித்தாயே என் மனதை தந்திடடி
நான் இசைக்கும் ராகமெல்லாம் அவன் தந்த யோகம் மான் விழியுன் தேகமெல்லாம் மயிலெனும் புஷ்பராகம்
நான் இசைக்கும் ராகமெல்லாம் அவன் தந்த யோகம்
பளபளக்கும் முகம் பார்க்க வெலவெலக்கும் என் நெஞ்சம் பார்வையை திருப்பாயோ பைங்கொடியே நான் தஞ்சம்
பளபளக்கும் முகம் பார்க்க வெலவெலக்கும் என் நெஞ்சம் பார்வையை திருப்பாயோ பைங்கொடியே நான் தஞ்சம்
ஓங்கார நாயகியே ஒயிலாட்டம் ஏனம்மா ரீங்கார மோகினியே தாங்காது பாரம்மா இப்பாவி யாரம்மா அப்பாவி நானம்மா இப்பாவி யாரம்மா அப்பாவி நானம்மா அப்பாவி நானம்மா அப்பாவி நானம்மாஆஆஆஆஆ
நான் இசைக்கும் ராகமெல்லாம் அவன் தந்த யோகம் மான் விழியுன் தேகமெல்லாம் மயிலெனும் புஷ்பராகம்
நான் இசைக்கும் ராகமெல்லாம் அவன் தந்த யோகம்