Naan Mugane Naanilathai

Naan Mugane Naanilathai Song Lyrics In English


தேவாஆஆஆஆதேவாஆஆஆ தேவாஆஆஆஆதேவாஆஆஆ

நான்முகனே நானிலத்தை படைத்தவனே நான்முகனே நானிலத்தை படைத்தவனே என்றும் நாமகளை நாவினிலே தரிப்பவனே எங்கள் நான்முகனே நானிலத்தை படைத்தவனே

பாலகன் வாழ வழி கூறாயோஓஒ தேவாதேவாதேவாதேவா பாலகன் வாழ வழி கூறாயோதேவா பாவி என் கூக்குரலை கேட்டு நீயும் வாராயோ நான்முகனே நானிலத்தை படைத்தவனே

ஏழை என்று என்னை இங்கு ஏன் படைத்தாய் நீயே எழுதிய விதியில் ஏனோ சோதனை வைத்தாய் ஏழை என்று என்னை இங்கு ஏன் படைத்தாய் நீயே எழுதிய விதியில் ஏனோ சோதனை வைத்தாய்

உன் படைப்பில் எத்தனையோ பேதமைய்யா அய்யா அய்யா அய்யா அய்யா உன் படைப்பில் எத்தனையோ பேதமைய்யா அய்யா இன்னும் இந்த நிலை என்றால் காரணம் யாரையா நான்முகனே நானிலத்தை படைத்தவனே

காரணனே பரிபூரணனே எங்கள் நாராயணனே வா பாலகன் துருவன் போல் எனை எண்ணி பரந்தாமா நீ வா காரணனே பரிபூரணனே எங்கள் நாராயணனே வா

எல்லாம் நானே என்றாய் கீதையில் நானும் நீயன்றோ செல்வம் யாவும் சிலரிடம் தானோ வீதியில் இது நன்றோ காரணனே பரிபூரணனே எங்கள் நாராயணனே வா


ஞானத்தின் உருவமே மோனத்தின் வடிமாய் காலத்தின் நிலை காட்டினாய் மோகங்கள் தீர்க்கவே யோகத்தில் அமர்ந்ததால் லோகத்தை மறந்தனையோ

திங்கள் குலுங்கிட கங்கை புரண்டிட மங்கை மகிழ்ந்திடும் இறைவா பம்பை ஒலித்திட சங்கம் முழக்கிட அண்டம் திகைத்திட வருவாய்

சுடலையில் நடமிடும் திருவடி கலியுகம் முடிவுற மறுபடி ஆடாதோ திரிபுரம் எரியுற புவி அது சிறந்திட கனல் அது புவிதனில் மூளாதோ

பாவிகள் நிறைந்த பூமியில் ஊழித் தாண்டவம் ஆடிட வாராயோ ஏழைகள் எமக்கு ஏதினி வாழ்க்கை தீமைகள் அழித்திட வாராயோ

புலியுடை அணிந்த பித்தா வருக சடை முடி அமைந்த சித்தா வருக பித்தா வருக சித்தா வருக