Naanum Neeyum Indru

Naanum Neeyum Indru Song Lyrics In English


பாடகர்கள் : எஸ் பி பாலசுப்ரமணியம் மற்றும் மலேசியா வாசுதேவன்

பாடலாசிரியர் : வாலி



நானும் நீயும் இன்று இளைஞன் நாளை இந்த உலகின் தலைவன்

நானும் நீயும் இன்று இளைஞன் நாளை இந்த உலகின் தலைவன்

உள்ளம் இன்று துள்ளும் கன்று எண்ணம் எங்கு செல்லும் அங்கு நல் திறமை அருமை இனிமை புதுமை

நானும் நீயும் இன்று இளைஞன் நாளை இந்த உலகின் தலைவன் அஹான்



கொடியை போன்ற இடை குடங்கள் தாங்கி வர ஒடிவது என்ன அழகோ



செடியில் பூத்த மலர் சேலை கொண்டதென சிரிப்பதென்ன நிலவோஓ

நான் காணும் வண்ணம் நூறு நீ பார்க்கும் பார்வை வேறு நான் காணும் வண்ணம் நூறு நீ பார்க்கும் பார்வை வேறு மை பிரண்ட்ஸ்ஏ


ஏதோ சுகம் இடம் பதம் பெண்ணிடம் காதல் ரசம் தரும் கதை கண்ணிடம்

நீயோர் விதம் தினம் ஒரு பூவிடம் பாவம் உந்தன் மனம் ஒரு வண்டிடம் நாங்கள் நண்பர்களே

நானும் நீயும் இன்று இளைஞன் நாளை இந்த உலகின் தலைவன்

அலையின் மீது அன்னை மடியை போலே எண்ணி அமைந்தது என்ன மேகம்

குளிர்ந்த வாடை வந்து குறிஞ்சி பூவில் நின்று படிப்பதென்ன ராகம்

அலையென்னும் நீள ஆடை அசைந்தாட ஓடும் ஓடை அலையென்னும் நீள ஆடை அசைந்தாட ஓடும் ஓடை பொங்க

வானில் வரும் சுடர் நிறம் செந்நிறம் வட்டமிடும் முகில் நிறம் பொன்னிறம் காணும் அனுதினம் பெரும் கற்பனை நாளும் இதே உலா வரும் சிந்தனை எல்லாம் இன்பங்களே

நானும் நீயும் இன்று இளைஞன் நாளை இந்த உலகின் தலைவன்

உள்ளம் இன்று துள்ளும் கன்று எண்ணம் எங்கு செல்லும் அங்கு நல் திறமை அருமை இனிமை புதுமை

நானும் நீயும் இன்று இளைஞன் நாளை இந்த உலகின் தலைவன்