Nadada Raja Nadada |
---|
பாடல் ஆசிரியர் : ஏ மருதகாசி
நடடா ராஜா நடடா நீ நடடா ராஜா நடடா இந்த நாட்டினில் வாழும் மனிதர்கள் உன்னைப் பார்த்தே திருந்திடவே
நடடா ராஜா நடடா நீ நடடா ராஜா நடடா இந்த நாட்டினில் வாழும் மனிதர்கள் உன்னைப் பார்த்தே திருந்திடவே
உடலின் பலத்தாலே மனதின் உரத்தாலே உனைப் போல வாழ்ந்தாலே நிகரேது புவிமேலே
நடடா ராஜா நடடா நீ நடடா ராஜா நடடா
படை பல வந்தாலும் தடை எது நேர்ந்தாலும் பயமேதும் கிடையாது உன் பாதை தவறாது
நடடா ராஜா நடடா நீ நடடா ராஜா நடடா
நெஞ்சினிலே ஈரம் அஞ்சாப் பெரும் வீரம் இன்னும் நேர்மை உபகாரம் உனை நினைத்தால் வந்து சேரும்
நடடா ராஜா நடடா நீ நடடா ராஜா நடடா இந்த நாட்டினில் வாழும் மனிதர்கள் உன்னைப் பார்த்தே திருந்திடவே நடடா ராஜா நடடா