Nalla Kaaraam Pasu

Nalla Kaaraam Pasu Song Lyrics In English


அட டிய்யோடடிய்யோ டிய்யோடடிய்யோ ஹோஹோஹோய் அட டிய்யோடடிய்யோ டிய்யோடடிய்யோ ஹோஹோய்

நல்ல காராம் பசுக்களெல்லாம் காட்டுப் புல்ல மேயயிலே புல்லாங்குழல் எடுத்து பாட்டுச் சொல்வான் முத்துக்காள

யம்மா என் பாட்டக் கேட்கும் மாடுதான் கறந்திடும் எந்நாளும் ஏழு படி பாலுதான் நம்ம பாட்டுக்கும் மாட்டுக்கும் கூட்டு இருக்கு பாரு இத வீட்டுக்கு வீடு கூறிடும் இந்த ஊரு

நல்ல காராம் பசுக்களெல்லாம் காட்டுப் புல்ல மேயயிலே யம்மா என் பாட்டக் கேட்கும் மாடுதான் நம்ம பாட்டுக்கும் மாட்டுக்கும் கூட்டு இருக்கு பாரு இத வீட்டுக்கு வீடு கூறிடும் இந்த ஊருஹோய்

ஹேய் பசு மாடு ஒன்று மடி வத்தி போச்சு என்று நீ அடி மாடுயென்று அத விக்கப் போகலாமா அதுமட்டும் ஆகாது எந்நாளுமே உனை விட்டு போகாது ஒன் பாவமே

எப்போதும் நன்றி கெட்ட ஜாதி நம்ம ஜாதி செத்தாலும் கால்சோடாகும் வாயற்ற பிராணி என்னான்னு நானும் சொல்ல கெட்டுப் போச்சு பூமி எப்போது மனுஷனுக்கு புத்தி தரும் சாமி

பாலுதான் தந்த மாடுதான் இங்கு இன்னொரு தாயென எப்போதும் கெஞ்சிட வேணும்


நல்ல காராம் பசுக்களெல்லாம் காட்டுப் புல்ல மேயயிலே யம்மா என் பாட்டக் கேட்கும் மாடுதான் நம்ம பாட்டுக்கும் மாட்டுக்கும் கூட்டு இருக்கு பாரு இத வீட்டுக்கு வீடு கூறிடும் இந்த ஊரு

நாம் தெனம் மாடு மேய்ச்சா இதிலென்ன கேவலம்டா கோபால் சாமி கூட பசு மாட்ட மேய்ச்சவன்டா

எங்கேயோ ஒரு மாடு திசை மாறினா எனைத் தேடி வரும் பாரு குழலூதினா அன்றாடம் காதில் விழும் மாடு கத்தும்போது அம்மான்னு நாம சொன்ன ஆரம்ப வார்த்தை

அம்மாவ பார்த்ததில்ல நான் பொறந்தபோது கோமாதா போல ஒரு தாயிங்கு ஏது பாசமா உயிர் நேசமா இது காட்டுது பாலையும் ஊட்டுது ஒவ்வொரு நாளும்

நல்ல காராம் பசுக்களெல்லாம் காட்டுப் புல்ல மேயயிலே புல்லாங்குழல் எடுத்து பாட்டுச் சொல்வான் முத்துக்காள யம்மா என் பாட்டக் கேட்கும் மாடுதான் நம்ம பாட்டுக்கும் மாட்டுக்கும் கூட்டு இருக்கு பாரு இத வீட்டுக்கு வீடு கூறிடும் இந்த ஊரு தனதந்தனதந்தன தந்தன நானானானா தனதந்தனதந்தன தந்தன தாங்தாங்தாங்தக தா