Nalla Vellikizhamaiyile

Nalla Vellikizhamaiyile Song Lyrics In English


பாடலாசிரியர் : வாலி

நல்ல வெள்ளிக் கிழமையிலே அம்மா உன் வாசலிலே பாட்டெடுத்தேன் உந்தன் பெருமை சொல்ல வண்ணப் பூ தொடுத்தேன் நீ சூடிக் கொள்ள

நல்ல வெள்ளிக் கிழமையிலே அம்மா உன் வாசலிலே பாட்டெடுத்தேன் உந்தன் பெருமை சொல்ல வண்ணப் பூ தொடுத்தேன் நீ சூடிக் கொள்ள வாடியம்மா வாழ்த்திடத்தானே காந்தாரியம்மா உன் மகன் நானே

நல்ல வெள்ளிக் கிழமையிலே அம்மா உன் வாசலிலே பாட்டெடுத்தேன் உந்தன் பெருமை சொல்ல வண்ணப் பூ தொடுத்தேன் நீ சூடிக் கொள்ள

ஆலைக் கரும்பாலை நாம் போடலாம் ஆத்தா அருள் தானே சாறாக்குது சாறைப் பாகாக நாம் காய்ச்சலாம் அம்மா அருள்தானே இனிப்பாக்குது

செய் தொழில் நேர்த்தியுடன் செய்திட வேண்டும் என்று அக்கறை காட்டுகின்ற சக்கரை தேவன் இங்கு ஊர் மதிக்க பேர் விளங்க வாழ்வதெல்லாம் உன் அருளால்தானே

வெள்ளிக் கிழமையிலே அம்மா உன் வாசலிலே பாட்டெடுத்தேன் உந்தன் பெருமை சொல்ல வண்ணப் பூ தொடுத்தேன் நீ சூடிக் கொள்ள


இங்கே நாம் கொண்ட கை ராசியே அம்மா அவள் தந்த அருளாசியே என்றும் எனைக் காக்கும் மகராசியே வாழ்வேன் நான் உந்தன் புகழ் பேசியே

பிள்ளைகள் மேன்மைக்கெல்லாம் பெற்றவள் ஏணியடா அக்கரை சேர்வதற்கு அன்னைதான் தோணியடா காலம் எல்லாம் காவலுக்கு தாய் இருக்க கவலைகள் ஏது

வெள்ளிக் கிழமையிலே அம்மா உன் வாசலிலே பாட்டெடுத்தேன் உந்தன் பெருமை சொல்ல வண்ணப் பூ தொடுத்தேன் நீ சூடிக் கொள்ள வாடியம்மா வாழ்த்திடத்தானே காந்தாரியம்மா உன் மகன் நானே

நல்ல வெள்ளிக் கிழமையிலே அம்மா உன் வாசலிலே பாட்டெடுத்தேன் உந்தன் பெருமை சொல்ல வண்ணப் பூ தொடுத்தேன் நீ சூடிக் கொள்ள