Nedumaram

Nedumaram Song Lyrics In English


பாடல் ஆசிரியர் : உமா தேவி

ஹாஆஅஆஅஹாஆஅஆ ஹாஆஅஆஅஹாஆஅஆ

நெடுமரம் தொலைந்ததே நிழல் இங்கு மறைந்ததே கூடோடு குயில் வீழ்ந்ததே பசியினை உணர்ந்ததும் மடியில் பால் சுரந்திடும் தாய்மைக்கு ஈடேதிங்கே

ஊறும் தண்ணீர் கூட ஒரு நேரம் காயும் உன் பாசம் தீராதம்மா

காணும் முகம் யாவும் உன் சாயல் போலே கானல் காட்சி ஏனோ

நெடுமரம் தொலைந்ததே நிழல் இங்கு மறைந்ததே கூடோடு குயில் வீழ்ந்ததே பசியினை உணர்ந்ததும் மடியில் பால் சுரந்திடும் தாய்மைக்கு ஈடேதிங்கே

ஹாஆஅஆஅஹாஆஅஆ ஹாஆஅஆஅஹாஆஅஆ


பிள்ளை கூவத்தில் கள்ளம் சேர்ந்ததா கண்கள் தாண்டியே கங்கை போனதா உன் வாழ்த்து இல்லாமல் நான் ஆகாயம் போனாலுமே என் தோகை வான் ஏறுமா

உன் கால்கள் இல்லாத ஓர் பொன் வீட்டில் வாழ்ந்தாலுமே என் வாழ்வு வாழ்வாகுமா

சுற்றும் பூமியே நீ ஊட்டும் அன்பில் தானம்மா எந்தன் வாழ்க்கையே நீ போட்ட பிச்சை தானம்மா நெஞ்சணைச்சி கெஞ்சிடனும் எங்கிருக்க என் அம்மா

விழி உனை இழந்ததும் விளக்குகள் அணைந்ததே இருள் வந்து எனை சூழ்ந்ததே

பிழைகளை பொறுத்திடும் வலிகளை துடைத்திடும் தாயே ​​உன் நிழல் வேண்டுமே

ஹாஆஅஆஅஹாஆஅஆ ஹாஆஅஆஅஹாஆஅஆ