Nee Paarkindraai |
|---|
நீ பார்க்கின்றாய்
என்னுள்ளே மின்னல்
தொடும் உணர்வு நீ
பேசினாய் என்னுள்ளே
தென்றல் தொடும் உணர்வு
ஒரே முறை நீ
கண் பாரடி அதில் கண்டேன்
நான் தாயின் மடி காதல்
என்று சொன்னாலே
தியானம் அல்லவா
உன்னை எண்ணி நானும்
தியானம் செய்யவா
நீ பார்க்கின்றாய்
என்னுள்ளே மின்னல்
தொடும் உணர்வு
நீயம் நடந்தால்
என்னை கடந்தால் ஒரு
பூங்காவே என் மேலே
மோதும் சுகம்
கண்ணை அசைத்தாய்
என்னை இசைத்தாய் ஒரு
பனி பாறை என்னுள்ளே
தோன்றும் கனம்
உன்னை சுற்றிடும்
விண் கலம் ஆகின்றேன்
உந்தன் பார்வையில் நான்
வளமாகிறேன்
நீ ஒற்றை ரோஜா
தந்தால் அதில் உலக
பூவின் வாசம் நீ ஓர
கண்ணில் பார்த்தால்
சில லட்சம் மின்னல்
வீசும்
அன்பே அன்பே
நீ தரை வானவில்
உன்னை பாடும் நான்
தவ பூங்குயில்
நீ பார்க்கின்றாய்
என்னுள்ளே மின்னல்
தொடும் உணர்வு
உந்தன் விழிக்குள்
என்னை அடைத்தால் ஒரு
அழகான சிறைச்சாலை
இதுவல்லவா
உன்னை பிரிந்தால்
எந்தன் விழிக்குள் ஒரு
முன்னூறு முள் வந்து
நடமாடுதே
கொன்று விட்டதே
என் ஒரு பார்வையே அன்பு
செய்திடு என் அதிகாரியே
நீ பூமி பந்தில்
வந்து நடமாடும் குட்டி
சொர்க்கம் நீ கல்லில்
அல்ல பெண்ணே
கனியாலே செய்த
சிற்பம்
உந்தன் கண்கள்
அது ஒரு அங்குலம்
ஆனால் அதில் என்
உயிர் சங்கமம்
நீ பார்க்கின்றாய்
என்னுள்ளே மின்னல்
தொடும் உணர்வு நீ
பேசினாய் என்னுள்ளே
தென்றல் தொடும்
உணர்வு
ஒரே முறை நீ
கண் பாரடி அதில் கண்டேன்
நான் தாயின் மடி காதல்
என்று சொன்னாலே தியானம்
அல்லவா உன்னை எண்ணி
நானும் தியானம் செய்யவா
