Neeyindri Naano Naanindri Neeyo |
---|
பாடலாசிரியர் : ஏ மருதகாசி
நீயின்றி நானோ நானின்றி நீயோ நீயின்றி நானோ நானின்றி நீயோ நிலவின்றி வானோ இதை நினைவில் கொள்வாயோ
ஏனிந்த கோபம் இதிலென்ன லாபம் ஏனிந்த கோபம் இதிலென்ன லாபம் என் காதல் தீபம் எந்நாளும் நீயன்றோ
வானவில் ஏழு வண்ணக் காட்சியன்றோ காதலோ கோடி மலராமன்றோ காட்சியின் சாட்சி மனம் தானன்றோ வானவில் ஏழு வண்ணக் காட்சியன்றோ
வாடாத மேனி சூடான ராணி வாடாத மேனி சூடான ராணி பாடாத தேனீ பெண் பாவை நீயன்றோ
பாடாத ராகம் போடாத தாளம் பாடாத ராகம் போடாத தாளம் ஆடாத தெய்வம் என் தெய்வம் நீயன்றோ
வானவில் ஏழு வண்ணக் காட்சியன்றோ காதலோ கோடி மலராமன்றோ காட்சியின் சாட்சி மனம் தானன்றோ வானவில் ஏழு வண்ணக் காட்சியன்றோ
விரும்பாத எண்ணம் திரும்பாத வண்ணம் விரும்பாத எண்ணம் திரும்பாத வண்ணம் அரும்பான முல்லை குறுநகையும் சிந்தாதோ
அரும்பாக மின்னும் குறும்பான எண்ணம் அரும்பாக மின்னும் குறும்பான எண்ணம் கரும்பாகும் வண்ணம் கண்பார்வை சொல்லாதோ
வானவில் ஏழு வண்ணக் காட்சியன்றோ காதலோ கோடி மலராமன்றோ காட்சியின் சாட்சி மனம் தானன்றோ இருவர் : வானவில் ஏழு வண்ணக் காட்சியன்றோ வானவில் ஏழு வண்ணக் காட்சியன்றோ