Nenjil Uramum Indri |
---|
நெஞ்சில் உரமும் இன்றி நேர்மைத் திறமும் இன்றி வஞ்சனை சொல்வாரடி கிளியே வாய்ச் சொல்லில் வீரரடி கிளியே வாய்ச் சொல்லில் வீரரடி
கூட்டத்தில் கூடி நின்று கூவி பிதற்றலன்றி கூட்டத்தில் கூடி நின்று கூவி பிதற்றலன்றி நாட்டத்தில் கொள்ளாரடி கிளியே நாளில் மறப்பாரடி கிளியே நாளில் மறப்பாரடி
உப்பென்றும் சீனி என்றும் உள்நாட்டு சேலையென்றும் உப்பென்றும் சீனி என்றும் உள்நாட்டு சேலையென்றும் செப்பித் திரிவாரடி கிளியே செய்வதறியாரடி கிளியே செய்வதறியாரடி
பழமை பழமை யென்று பாவனை பேச லன்றிப் பழமை பழமை யென்று பாவனை பேச லன்றிப் பழமையிருந்த நிலை கிளியே பாமரர் ஏதறிவார்கிளியே பாமரர் ஏதறிவார்
சொந்த சகோதரர்கள் துன்பத்தில் சாதல் கண்டும் சொந்த சகோதரர்கள் துன்பத்தில் சாதல் கண்டும் சிந்தை இரங்காரடி கிளியே செம்மை மறந்தாரடி கிளியே செம்மை மறந்தாரடி
தாயைக் கொல்லும் பஞ்சத்தைத் தடுக்க முயற்சியுறார் தாயைக் கொல்லும் பஞ்சத்தைத் தடுக்க முயற்சியுறார் வாயைத் திறந்து சும்மா கிளியே வந்தே மாதரமென்பார் வந்தே மாதரமென்பார்