Nenjukkulle Aasa Vantha |
---|
நெஞ்சுக்குள்ளே ஆசை வந்தா
பான்னா பாவன்னா ராமசிவனே கண்ட கண்ட பக்கமெல்லாம் என் துரையே கண்ணிரெண்டும் போகவிடாதே கண்ட கண்ட பக்கமெல்லாம் என் துரையே கண்ணிரெண்டும் போகவிடாதே
மோகம் வந்து தீண்டும் போதிலே பாராததைப் பார்க்கச் சொல்லுமே காவல் தாண்டி போகச் சொல்லுமே ஊரான் வீட்டு தோட்டத்திலே நீ நடந்தா உன் மானம் சந்தையிலே வித்து போகுமே
நெஞ்சுக்குள்ளே ஆசை வந்தா பான்னா பாவன்னா ராமசிவனே கண்ட கண்ட பக்கமெல்லாம் என் துரையே கண்ணிரெண்டும் போகவிடாதே
எழுதினவ ஏட்டக் கெடுத்தான் படிச்சவனோ பாட்டக் கெடுத்தான் நானும் சொன்னேன் கேட்டா கேளுங்க அனுபவத்தை சொல்லி வைச்சேன் அத கேட்டு ஆசை பக்கம் பார்க்காதையா அதனாலே அளவு மீறி போகாதீங்க
நெஞ்சுக்குள்ளே ஆசை வந்தா பான்னா பாவன்னா ராமசிவனே கண்ட கண்ட பக்கமெல்லாம் என் துரையே கண்ணிரெண்டும் போகவிடாதே
கொண்டவனோ தூங்கிவிட்டான் வந்தவனோ பார்த்துக்கிட்டான் எங்கே யாரை குத்தம் சொல்லுவேன் அழகழகா பூவைக் கண்டால் யாருக்குத்தான் ஆசை வராது சுகம் பார்க்க எவனுக்குத்தான் வேகம் வராது
நெஞ்சுக்குள்ளே ஆசை வந்தா பான்னா பாவன்னா ராமசிவனே கண்ட கண்ட பக்கமெல்லாம் என் துரையே கண்ணிரெண்டும் போகவிடாதே கண்ட கண்ட பக்கமெல்லாம் என் துரையே கண்ணிரெண்டும் போகவிடாதே என் துரையே கண்ணிரெண்டும் போகவிடாதே