Nilavae Unnai Azhaithen |
---|
பாடலாசிரியர் : புலமைபித்தன்
நிலவே உன்னை அழைத்தேன் நினைவை சொல்லத் துடித்தேன் விழி தூங்காமலும் மனம் தாங்காமலும் ஏன் இந்த போராட்டமோஓஓஓஓ
நிலவே உன்னை அழைத்தேன் நினைவை சொல்லத் துடித்தேன்
வானம் எங்கும் மேகம் வந்து பந்தலிட்டது வாடை என்னை தேடி வந்து நெஞ்சைத் தொட்டது நாணம் கொஞ்சம் ஆசை கொஞ்சம் போட்டி இட்டது நாணம் தன்னை ஆசை இன்று வென்று விட்டது
கருவிழி ஓரம் மெல்ல சிவக்க கரைகளை மீறி உள்ளம் நடக்க
நிலவே உன்னை அழைத்தேன் நினைவை சொல்லத் துடித்தேன்
ஒன்றும் ஒன்றும் ரெண்டு என்று நேற்று படித்தேன் ஒன்றும் ஒன்றும் ஒன்றே என்று இன்று புரிந்தேன் நானும் நீயும் ரெண்டு அல்ல ஒன்றில் ஒன்றுதான் நாடி இந்த சேதி சொல்லும் நாளும் இன்றுதான்
விழிகளில் ஆசை தீபம் எரியும் இதயத்தில் உந்தன் ஜோதி தெரியும்
நிலவே உன்னை அழைத்தேன் நினைவை சொல்லத் துடித்தேன் விழி தூங்காமலும் மனம் தாங்காமலும் ஏன் இந்த போராட்டமோஓஓஓஓ
நிலவே உன்னை அழைத்தேன் நினைவை சொல்லத் துடித்தேன்