நூறாண்டுக்கு ஒரு முறை பாடல் வரிகள்

Starring Arjun, Tabu
Movie Thaayin Manikodi
Music ByVidyasagar
Lyric By Vairamuthu
SingersGopal Sharma, Devi
Year 1998

Nooranduku Oru Murai Song Lyrics In English

நூறாண்டுக்கு ஒரு முறை
பூக்கின்ற பூவல்லவா
இந்த பூவுக்கு சேவகம்
செய்பவன் நான் அல்லவா

இதழோடு இதழ் சேர்த்து
உயிரோடு உயிர் கோர்த்து வாழவா

நூறாண்டுக்கு ஒரு முறை
பூக்கின்ற பூவல்லவா
இந்த பூவுக்கு சேவகம்
செய்பவன் நீ அல்லவா

கண்ணாளனே கண்ணாளனே
உன் கண்ணிலே என்னை கண்டேன்
கண் மூடினாள் கண் மூடினாள்
அந்நேரமும் உன்னை கண்டேன்

ஒரு விரல் என்னை தொடுகையில்
உயிர் நிறைகிறேன் அழகா
மறு விரல் வந்து தொடுகையில்
விட்டு விலகுதல் அழகா

உயிர் கொண்டு வாழும் நாள் வரை
இந்த உறவுகள் வேண்டும் மன்னவா

நூறாண்டுக்கு ஒரு முறை
பூக்கின்ற பூவல்லவா
இந்த பூவுக்கு சேவகம்
செய்பவன் நீ அல்லவா


இதே சுகம் இதே சுகம்
எந்நாளுமே கண்டால் என்ன
இந்நேரமே இந்நேரமே
என் ஜீவனும் போனால் என்ன

முத்தத்திலே பலவகை உண்டு
இன்று சொல்லட்டுமா கணக்கு
இப்படியே என்னை கட்டி கொள்ளு
மெல்ல விடியட்டும் கிழக்கு

அச்சம் பட வேண்டாம் பெண்மையே
எந்தன் ஆண்மையில் உண்டு மென்மையே

நூறாண்டுக்கு ஒரு முறை
பூக்கின்ற பூவல்லவா
இந்த பூவுக்கு சேவகம்
செய்பவன் நீ அல்லவா

இதழோடு இதழ் சேர்த்து
உயிரோடு உயிர் கோர்த்து வாழவா

நூறாண்டுக்கு ஒரு முறை
பூக்கின்ற பூவல்லவா
இந்த பூவுக்கு சேவகம்
செய்பவன் நீ அல்லவா

Nooranduku Oru Murai Song Lyrics from movie Thaayin Manikodi. Nooranduku Oru Murai song sung by Gopal Sharma, Devi. Nooranduku Oru Murai Song Composed by Vidyasagar. Nooranduku Oru Murai Song Lyrics was Penned by Vairamuthu. Thaayin Manikodi movie cast Arjun, Tabu in the lead role actor and actress. Thaayin Manikodi movie released on 1998