Oh Alagu Nilavu |
---|
ஓஅழகு நிலவு சிரிக்க மறந்ததே ஓமலரும் சிரிப்பில் உறவை மறந்ததே என் கண்மணி பனிதுளி கண் மீதிலா விண் மீதிலே வலம் வரும் நீ வெண்ணிலா
ஓஅழகு நிலவு சிரிக்க மறந்ததேஓ
இமைகள் மூடும் கண்களாய் நான் வாழ்கிறேன் இதயம் கூட பாரமாய் நான் மூழ்கினேன் இலைகள் மூடும் கனிகள்தான் என் ஆசையே இலக்கணம் தான் இணைந்திடா குயிலோசையே
நீர் மேல் அழகிய கோலம் போட்டேன் தினம் தினம் நானும் நினைத்தால் இனிமைதான் நடந்தால் அருமைதான் நினைவே நினைவிலே விழியிலே எழுதடி
ஓஅழகு நிலவு சிரிக்க மறந்ததே ஓமலரும் சிரிப்பில் உறவை மறந்ததே என் கண்மணி பனிதுளி கண் மீதிலா விண் மீதிலே வலம் வரும் நீ வெண்ணிலா
ஓஅழகு நிலவு சிரிக்க மறந்ததேஓ
விதைப்பதும் அது முளைப்பதும் யார் சொல்லித்தான் முளைப்பதும் அது விளைவதும் யார் கையில்தான்
மலர்வதும் அது மணப்பதும் யார் பார்த்துதான் மணப்பதும் அது நிலைப்பதும் யார் கேட்டுதான்
யாரோ எழுதிய பாதை புரிந்தால் விளங்கிடும் கீதை நினைவே விலகிடு நினைத்தால் விலை கொடு உறவே உறவிலே உருகியே எழுதடி
ஓஅழகு நிலவு சிரிக்க மறந்ததே ஓமலரும் சிரிப்பில் உறவை மறந்ததே என் கண்மணி பனிதுளி கண் மீதிலா விண் மீதிலே வலம் வரும் நீ வெண்ணிலா
ஓஅழகு நிலவு சிரிக்க மறந்ததேஓ