Oh Sukumari

Oh Sukumari Song Lyrics In English




ஹா ஹா
ஹா ஹா

ஓ சுகுமாரி ஓ
சஞ்சாரி என் அலங்காரி
நீ ஓ சுகுமாரி
ஏ லம்பா தானே

ஓ சுகுமாரி ஓ
சிங்காரி என் குமாரி நீ
என் குமாரி
என் குமாரி
என் குமாரி

குமாரி
குமாரி

குமாரி என் காதல்
சிக்கி முக்கி திக்கி விக்குது
குமாரி என் நெஞ்சு விம்மி
விம்மி பம்மி நிக்குது குமாரி
என் வார்த்தை கடல் வற்றி
விட்டதே

நான் தோற்று
போவேன் என்று அஞ்சியே
என் தேர்வை எல்லாம்
ஒத்தி வைக்கிறேன்

ரகுமாரி சுகுமாரி
என் மனம் ஒரு மலரடி
மலருக்குள் அடி தடி

குமாரி என் காதல்
சிக்கி முக்கி திக்கி விக்குது
குமாரி என் நெஞ்சு விம்மி
விம்மி பம்மி நிக்குது குமாரி
என் வார்த்தை கடல் வற்றி
விட்டதே



இந்த காதல் என்ன
பெரும் பாரமா இது பேறு
காலம் இல்லா கற்பமா
ஓஹோ ஓஓ

காதலை மறைத்தால்
கனம் தாங்காமல் என்னுயிர்
செத்துபோகும் இல்லையா
காதலை சொல்லி இல்லையென்று
மறுத்தால் காதலே செத்து
போகும் இல்லையா


ஒரு காதல் கடிதம்
எதுவும் மனசை முழுசா
சொல்வது இல்லை
நீ கண்கள் அடைத்தால்
காதல் நுழைய இன்னொரு
வாசல் இல்லை

குமாரி குமாரி
ஆஆஆ ஆஆஆ

ஆஹா ஆஹா
லாலா லாலா லல் லல்
லா லாலா லாலாலா

நான் தானம் கேட்கும்
ஒரு ஊமையா தினம்
தேய்கிறேனே இது தேவையா

கூடைகள் எங்கும்
பூக்களை நிரப்பி கோயிலை
தேடி நடக்கின்றேன்

கூடையை கொடுத்து
கும்பிட்டு முடித்து கோரிக்க
வைக்க மறக்கின்றேன்

அந்த கடவுளை விடவும்
பெரியவன் ஒருவன் பூமியில்
உள்ளான் எவன் பெண் கண்களை
பார்த்து காதலை சொல்லும் தைரியம்
உள்ளவன் அவன் அவன் அவன்

குமாரி

குமாரா உன் காதல்
சிக்கி முக்கி திக்கி விக்குதா
குமாரா உன் நெஞ்சு விம்மி
விம்மி பம்மி நிக்குதா குமாரா
உன் வார்த்தை கடல் வற்றி
விட்டதா

நான் தோற்று
போவேன் என்று அஞ்சியே
என் தேர்வை எல்லாம்
ஒத்தி வைக்கிறேன் ரகுமாரி
சுகுமாரி என் மனம் ஒரு மலரடி
மலருக்குள் அடி தடி