Ondralla Rendalla Oru |
---|
பாடல் ஆசிரியர் : வாலி
ஒன்றல்ல இரண்டல்ல ஒரு கோடி எண்ணங்கள் நெஞ்சோடு போராடுது என்ன சொல்ல நான் என்ன சொல்ல
ஒன்றல்ல இரண்டல்ல ஒரு கோடி எண்ணங்கள் நெஞ்சோடு போராடுது என்ன சொல்ல நான் என்ன சொல்ல
ஊராரின் உற்றாரின் முன்பு உறவென்று நாம் ஆன பின்பு ஊராரின் உற்றாரின் முன்பு உறவென்று நாம் ஆன பின்பு
மாறாது மறையாது அன்பு மாறாது மறையாது அன்பு உன் மணவாளன் என்று வருவானோ இங்கே என்று என்னை கேலி செய்த மஞ்சம் இன்று நம்மை சேர்த்து வைத்து கொஞ்சும்
என் கண்கள் நீ வாழும் கோயில் என் உள்ளம் நீ தூங்கும் மஞ்சம் என் கண்கள் நீ வாழும் கோயில் என் உள்ளம் நீ தூங்கும் மஞ்சம்
என் கைகள் நீ சூடும் மாலை என் கைகள் நீ சூடும் மாலை என் பூமேனிதானே பொன்னூஞ்சல் என்று பக்கம் வந்து பள்ளிக் கொள்ள வேண்டும் வெட்கம் வந்து என்னை வெல்ல வேண்டும் பக்கம் வந்து பள்ளிக் கொள்ள வேண்டும் வெட்கம் வந்து என்னை வெல்ல வேண்டும்ஆ
ஒன்றல்ல இரண்டல்ல ஒரு கோடி எண்ணங்கள் நெஞ்சோடு போராடுது என்ன சொல்ல நான் என்ன சொல்ல