Ooran Potta Thottathile

Ooran Potta Thottathile Song Lyrics In English


பாடகிகள் :  எல் ஆர் ஈஸ்வரி மற்றும் ஏ பி கோமளா

ஆலோலம் ஆலோலம் ஊரான் போட்ட தோட்டத்திலே உழுது வெதச்ச மாதிரியே ஊரான் போட்ட தோட்டத்திலே உழுது வெதச்ச மாதிரியே கதிர எல்லாம் கொத்துறியே கல்லக் கண்டா கத்துறியே

ஆலோலம் ஆலோலம்

காயாத கானகத்தே நின்றுலாவும் காரிகையே சாயாத கொம்புடனும் தத்தும் நடையுடனும் மான் வந்ததாமான் வந்ததா மேயாத மான் வந்ததா தமிழ் மான் வந்ததா

மதுவென்ற குடம் ரெண்டு துடிக்கும் கண்ணில் இரு வண்டு சிறகின்றி பறக்கும் சின்ன நதியொன்று உடலென்று நடிக்கும் அதன் நடையுந்தன் நடை போல இருக்கும் மான் வந்ததாமான் வந்ததா மேயாத மான் வந்ததா தமிழ் மான் வந்ததா

கம்பு தினையும் விளையும் இடங்களில் கொம்பு மான் தேடுறியா கம்பு தினையும் விளையும் இடங்களில் கொம்பு மான் தேடுறியா இதை நான் நம்பணும் என்கிறியா ஒரு வம்பு வரும் முந்தி தம்பி நீ அப்படி கொஞ்சம் விலகிறியா ஒரு வம்பு வரும் முந்தி தம்பி நீ அப்படி கொஞ்சம் விலகிறியா உனக்கு நெஞ்சில் பயமில்லையா உனக்கு நெஞ்சில் பயமில்லையா

தொண்டு கிழவன் என்னைக் கண்டு பொன் வண்டு குமரியர்கள் வந்து நாட்டு தினையும் தேனும் தந்து கையைக் காட்டி குறியும் கேட்பதுண்டு


நல்ல நல்ல ரேகை ஓடுது அம்மா கையில் நல்ல நல்ல ரேகை ஓடுது நான் சொன்னது நடக்கப் போகுது நல்ல நல்ல ரேகை ஓடுது

ரேகையும் திருமண ரேகையும் நல்ல மன ரேகையும் அன்பு குண ரேகையும் உடன் இங்கு நல்ல நல்ல ரேகை ஓடுது அம்மா கையில் நல்ல நல்ல ரேகை ஓடுது

தாகம் குறைந்தது தாகம் குறைந்தது வள்ளி குறமகளே அடி வண்ண சிறுக் கிளியே கொண்ட மோகமும் நான் வந்த வேகமும் மாத்திரம் இன்னும் குறையலையே உனக்கு எண்ணம் புரியலையே எனக்கும் சொல்லத் தெரியலையே உனக்கு எண்ணம் புரியலையே எனக்கும் சொல்லத் தெரியலையே

வயசுக்கு தகுந்தபடி படுங்க தாத்தா படுங்க ஆசப் படுங்க உங்க வாலிப எண்ணங்கள விடுங்க உதறி விடுங்க கையை விடுங்க

என்னைக் கண்டு என்ன பயமா பழம் தன்னைக் கிளி வெறுத்திடுமா என்னைக் கண்டு என்ன பயமா பழம் தன்னைக் கிளி வெறுத்திடுமா அட நீ என்ன பெரிய யானையா என்னை நிம்மதியா கொஞ்சம் நேரம் விடய்யா அட நீ என்ன பெரிய யானையா என்னை நிம்மதியா கொஞ்சம் நேரம் விடய்யா

எல்லாமே நானென்று எண்ணி உனை மறந்து சொல்லாமல் வந்த துயர் பொறுத்து அண்ணா விக்கினங்கள் தீர்த்து விரும்பும் மணம் முடிக்க இக்கணமே இங்கே எழு மணம் முடிக்க இக்கணமே இங்கே எழு