Or Poomalai Adhil |
---|
பாடலாசிரியர் : வாலி
ஆஆஆஆஆஅஆ அஆஆஆஆஆஆஹாஹாஆ
ஓர் பூமாலை அதில் தேன் இவ்வேளை மன்னன் மார்பில் தவழ்ந்திடும் போது என்னை நானே நினைப்பது ஏது இந்த வானம் பூமி யாவும் மயங்கிட
ஓர் பூமாலை அதில் தேன் இவ்வேளை
விழியில் ஒரு கவிதை நாடகம் வரையும் இந்த அழகு மோகனம் நினைவில் இந்த தலைவன் ஞாபகம் நிலவுகின்ற பருவம் வாலிபம்
பனி விழும் இரவுகள் பலப்பல கனவுகள்
தொட்ட இடம் யாவும் சர்க்கரையும் பாலும் கொண்டு வரும் தேகம் என்னை வந்து கூடும் தொட்ட இடம் யாவும் சர்க்கரையும் பாலும் கொண்டு வரும் தேகம் என்னை வந்து கூடும்
இனி ஆதி அந்தம் எங்கும் புது ஆசை வெள்ளம் பாயும் உறவிது
ஓர் பூமாலை அதில் தேன் இவ்வேளை
ஆஹாஆஹாஆஆ ஆஹாஆஹாஆஆ ஆஹாஆஆஆஆஹாஹாஆ
மலையில் விழும் அருவி போலவே மனதில் எழும் கதைகள் கோடியே உனக்கும் வரும் உணர்ச்சி போலவே எனக்கும் வரும் இனிய தோழியே
முதல் முதல் தொடுவது தினம் தினம் வளர்வது
முத்திரைகள் போட நித்திரையும் ஓடும் சிற்றிடையும் ஆட சித்திரமும் வாடும் முத்திரைகள் போட நித்திரையும் ஓடும் சிற்றிடையும் ஆட சித்திரமும் வாடும்
சுகம் பாதி பாதி ஆகும் ஒரு போதை வந்து சேரும் பொழுதிது
ஓர் பூமாலை அதில் தேன் இவ்வேளை மன்னன் மார்பில் தவழ்ந்திடும் போது என்னை நானே நினைப்பது ஏது இந்த வானம் பூமி யாவும் மயங்கிட
ஓர் பூமாலை அதில் தேன் இவ்வேளை